நல்லூர்ச் சிறுமேதாவியார்
நல்லூர்ச் சிறுமேதாவியார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர் ஆவார். சங்க இலக்கியம் தொகுப்பில் இவரது பாடலாக ஒன்றே ஒன்று உள்ளது.[1]
நற்றிணை 282 சொல்லும் செய்தி[தொகு]
தலைவி சொல்கிறாள். 'நான் அவன் நினைவாகவே இருக்கிறேன். அதனால் என் தோள் மெலிந்து வளையல் கழன்றோடுகிறது. என் அல்குல் வரி ஏக்கத்தால் வாடிப்போயிற்று. இதனை வேலன் தன் கழங்கை உருட்டி அணங்கு வருத்திற்று என்று சொல்லித் தணிக்கிறான்.' தணியுமா? தணிந்தால் சரி.[2]
மேற்கோள் குறிப்பு[தொகு]
- ↑ நற்றிணை 282
- ↑
தோடு அமை செறிப்பின் இலங்கு வளை ஞெகிழ,
கோடு ஏந்து அல்குல் அவ் வரி வாட,
நல் நுதல் சாய, படர் மலி அரு நோய்
காதலன் தந்தமை அறியாது, உணர்த்த,
அணங்குறு கழங்கின் முது வாய் வேலன் 5
கிளவியின் தணியின், நன்றுமன்-சாரல்
அகில் சுடு கானவன் உவல் சுடு கமழ் புகை,
ஆடு மழை மங்குலின், மறைக்கும்
நாடு கெழு வெற்பனொடு அமைந்த, நம் தொடர்பே?