நல்லினி
Jump to navigation
Jump to search
நல்லினி வெளியன் வேள் என்பவனின் மகள். சேர அரசன் உதியஞ்சேரல் மனைவி. இவளது மகன்கள் இருவர் சேர நாட்டை ஆண்டனர். இவர்கள் பதிற்றுப்பத்து இரண்டாம் பத்து, மூன்றாம் பத்து என்னும் இரண்டு பத்துகளின் பாட்டுடைத் தலைவர்கள். இவர்களின் பெயர்கள் முறையே இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பல்யானைச் செல்கெழு குட்டுவனை என்பன.