நல்லிச்சேரி ஜம்புநாதசுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நல்லிச்சேரி ஜம்புநாதசுவாமி கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

அய்யம்பேட்டை அருகில் இக்கோயில் அமைந்துள்ளது. நந்திதேவர் வழிபட்டதால் இவ்வூர் நந்திகேசுவரம் என்றழைக்கப்பட்டது. நடுவுச்சேரி என்றும் அழைக்கப்பட்டது. ஊரைச் சுற்றிலும் வயல்கள் நிறைந்த நிலையில் அறுவடையான நெல் இங்கு குவிக்கப்பட்டதால் நெல்லிச்சேரி என்று பெயர் பெற்றது. தற்போது நல்லிச்சேரி ஆக மாறியுள்ளது.[1]

இறைவன், இறைவி[தொகு]

இக்கோயிலின் மூலவராக ஜம்புநாதசுவாமி உள்ளார். இங்குள்ள இறைவி அலங்காரநாயகி ஆவார்.[1]

அமைப்பு[தொகு]

இக்கோயில்களுக்கு இரு வாயில்கள் உள்ளன. மூலவர் சன்னதிக்கு எதிரேயுள்ள மேற்கு வாசல் எப்போதும் பூட்டிய நிலையில் காணப்படும். இறைவி சன்னதிக்கு எதிரான வாயிலே முதன்மை வாயிலாக உள்ளது. வைஷ்ணதேவி எனப்படும் நல்லிமங்கை வழிபட்ட தலமாகும்.[1]

திருவிழாக்கள்[தொகு]

பிரதோஷம், பௌர்ணமி, சிவராத்திரி சிறப்பான விழாக்களாக இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன.[1]

மேற்கோள்கள்[தொகு]