நலிவுற்ற கலைஞர்களுக்கான நிதியுதவித் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாடு அரசு வறுமையில் வாடும் நலிவுற்ற கலைஞர்களுக்கு உதவும் நோக்கத்துடன் அவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தைச் செயல்படுத்துகிறது.

உதவிக்கான தகுதிகள்[தொகு]

  1. இயல், இசை, நாடகம் எனும் ஏதாவது துறையில் செயல்பட்டு குறிப்பிடத்தக்க கலைச்சேவை செய்தவராக இருத்தல் வேண்டும்.
  2. கலைஞர்கள் 58 வயது முழுமையாகி இருக்க வேண்டும்.
  3. ஆண்டு வருமானம் ரூபாய் 4800க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

உதவித்தொகை[தொகு]

  • நிதியுதவியாக மாதந்தோறும் ரூபாய் 500 வழங்கப்படும்.

விண்ணப்பிக்க[தொகு]

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேவையான விண்ணப்பப்படிவங்களைப் பெற்று நிரப்பி தேவையான இணைப்புகளைச் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பயனாளிகள் தேர்வு[தொகு]

இயல், இசை நாடகமன்றச் செயலாளர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பரிந்துரைப்படி அமைக்கப்பட்டுள்ள உயர்மட்டக் குழுவால் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு கலைஞர்களைத் தேர்வு செய்து நிதியுதவி அளிக்கப்படுகிறது.