உள்ளடக்கத்துக்குச் செல்

நற்பிட்டிமுனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நற்பிட்டிமுனை
கிராமம்
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்அம்பாறை
பிசெ பிரிவுகல்முனை
நேர வலயம்ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்)
 • கோடை (பசேநே)ஒசநே+6 (Summer time)

நற்பிட்டிமுனை (Natpiddimunai) இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு கிராமம் ஆகும். இங்கு தமிழ், முசுலிம் மக்கள் இணைந்து வாழ்கின்றனர்.

இவ்வூர் எட்டு கிராம சேவையாளர் பிரிவுகளில் சுமார் 8000 இக்கும் மேற்பட்ட மக்கள் தொகையையும் கொண்டிருக்கின்றது.[1][2].

பெயர் வழக்கு

[தொகு]

இக் கிராமத்தைக் குறிக்கப் பல்வேறுபட்ட பெயர்கள் பயன்படுத்தப்பட்டு வந்திருப்பது முக்கிய அம்சமாகும். பட்டிப்பளை ஆற்றின் கிளை மற்றும் வயல்காணிகளை ஊடறுத்து “நா” வடிவில் நீண்டிருக்கும் முனை என்பதாக “நாப்புட்டிமுனை” என்ற பெயர் வழங்கப்பட்டது எனவும் அதுவே “நாப்புட்டி” என்று வழங்கப்பட்டு வந்துள்ளதாகவும்[3],[4]வரலாற்று ரீதியிலும் நாட்டார் வழக்கிலும் உள்ள கதைகளின் அடிப்படையில் ஆரம்ப காலத்தில் இவ்வூர் 'நாற்படைமுனை' என அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.[5] ஆங்கிலேயர் காலத்தில் நாய்ப்பட்டிமுனை என இது அரச ஆவணங்களில் பதிவாகியிருந்தது.[6] பல்வேறு திரிபுகளின் ஊடாக இவ்வூர் அழைக்கப்பட்ட போதிலும் நற்பிட்டிமுனை என்பதே தற்காலத்தில் பயன்படுத்தப்படுகின்றது.[7]

வணக்கத் தலங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kalmunai Muslim Division - Kalmunai". Kalmunai Muslim Division - Kalmunai.
  2. "Kalmunai Tamil Division - Kalmunai". Kalmunai Tamil Division - Kalmunai.
  3. கமலாம்பிகை லோகிதராசா,"பத்தும் பதியமும்", 2012
  4. நடராசா எவ். எக்ஸ் சி, "மட்டக்களப்பு மான்மியம்", 1998
  5. அரசரெத்தினம் எஸ், “கல்முனையில் தமிழர் ..”, .2022
  6. ""நாய்பட்டிமுனை" உப அஞ்சல் அலுவலக பெயர் "நற்பிட்டிமுனை" உப அஞ்சல் அலுவலகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது". Battimedia.lk.
  7. சஞ்சீவி சிவகுமார்,"நற்பிட்டிமுனைத் தமிழர் வரலாற்றுச் சால்புகள்", 2024
"https://ta.wikipedia.org/w/index.php?title=நற்பிட்டிமுனை&oldid=4436550" இலிருந்து மீள்விக்கப்பட்டது