நமசிவாய மூர்த்திகள்
நமசிவாய மூர்த்திகள் என்பவர் திருவாவடுதுறை ஆதீனத்தை கி.பி 14 ஆம் நூற்றாண்டில் தோற்றுவித்தவர் ஆவார். இவரை திருவாவடுதுறை ஆதின குரு முதல்வர் என அழைக்கின்றனர்.[1]
இளமைப் பருவம்[தொகு]
நமசிவாய மூர்த்திகள் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள மூவலூரில் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வைத்தியநாதன் என்பதாகும். இவருடைய குருவான சித்தர் சிவப்பிரகாசர் ஒரு நாள் வீதி வழியே சென்ற வைத்தியநாதனைக் கண்டு தன்னுடன் அழைத்து திருவாவடுதுறை வந்தார்.
வைத்தியநாதரின் ஆன்மீக ஈடுபாடு அறிந்து, அவருக்குத் தீட்சை அளித்தார். உடன்,நமசிவாயம் எனும் பெயரையும் சூட்டினார். சிவப்பிரகாசர் தாம் வீற்றிருந்த இடத்தில் ஓர் அறை அமைந்து அங்கு இருந்து சித்தாந்த மரபு தழைக்க, சிவஞான உபதேசம் செய்துவர ஆணையிட்டார்.
குருபரம்பரை[தொகு]
திருவாவடுதுறை ஆதீனக் குருபரம்பரை வளர்ந்தோங்க வேண்டும் என்பதற்காக நமசிவாயமூர்த்திகள், மறைஞான தேசிகருக்கு ஆசாரிய அபிடேகம் செய்து இளவரசாக நியமித்தார். மறைஞானர் தம் குருவின் நாமம் சொல்லிய படியே நிட்டைக் (முக்தி) கூடினார். அவர் நிட்டைக் கூடிய இடத்திற்கு மறைஞான தபோவனம் என்ற பெயர் உண்டாயிற்று.
சமாதி கூடல்[தொகு]
நமசிவாய மூர்த்திகள் ஓர் தை மாதத்து அசுபதி நன்னாளில் முக்தி பெற்றார். அவர் முக்தி பெற்ற திருவாவடுதுறை ஆதீனத்தில் ஞானசமாதித் திருக்கோயில் எழுப்பப்பெற்று தினமும் காலை, மாலை பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
குருபூசை[தொகு]
நமசிவாய மூர்த்திகள் மறைந்த தை மாதம் அசுபதி நாளிலிருந்து 10 நாள்கள் சுவாமிகளின் குருபூஜை ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றது.[2] இதன் தொடக்கமாக, கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, அன்னக்கொடி ஏற்றப்படுகிறது. பத்து நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் நாள்தோறும் சிறப்பு பூஜைகளும், சிறப்பான சமயப் பணியாற்றி வருபவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் பொற்கிழியுடன் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிகளும், ஆன்மிகப் புத்தகங்கள் வெளியீடும் நடைபெறுகிறது. [3]
ஐந்தாம் நாள் உற்சவமாக கோமுக்தீஸ்வரர் கோயிலில் திருஞானசம்பந்தருக்கு இறைவன் பொற்கிழி வழங்கும் விழா நடைபெறுகிறது. குருமுதல்வர் நமசிவாய மூர்த்திகள் சந்நிதியில் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்படுகிறது. திருவாவடுதுறை ஆதினம் பல்லக்கில் வீதியுலா செல்வதும், ஞானகொலுக்காட்சி காண்பதும், பட்டணப்பிரவேசம் ஆகியவை நடைபெறுகின்றன.
மேற்கோள்[தொகு]
1) மு.அருணாசலம்,"தமிழ் இலக்கிய வரலாறு"14 ஆம் நூற்றாண்டு - பக்கம்-128.
- ↑ "திருவாவடுதுறை ஆதீனம் குரு முதல்வர் நமசிவாய மூர்த்திகள் குருபூஜை விழா". Dinamalar.
- ↑ "நமசிவாய மூர்த்திகள் குருபூஜை: 14 பேருக்கு விருதுகள் அளிப்பு". Dinamani. zero width space character in
|url=
at position 94 (உதவி); zero width space character in|title=
at position 30 (உதவி) - ↑ B, மு இராகவன்,Prasanna Venkatesh (20 ஜன., 2023). "திருவாவடுதுறை ஆதீனப் பட்டணப் பிரவேசம்- ஜனவரி 28 -ல் தொடக்கம்!". https://www.vikatan.com/. Check date values in:
|date=
(உதவி); External link in|website=
(உதவி)
உசாத்துணை[தொகு]
பூசை.சுப்பிரமணியத்தம்பிரான்,"குருபரம்பரை விளக்கம்" திருவாவடுதுறை ஆதீனம். திரிசக்தி,தீபாவளி மலர்-2010, பக்கம்-158.