நந்திக்கடல்
நந்திக்கடல் | |
---|---|
அமைவிடம் | முல்லைத்தீவு மாவட்டம், இலங்கை |
ஆள்கூறுகள் | 9°17′0″N 80°46′0″E / 9.28333°N 80.76667°Eஆள்கூறுகள்: 9°17′0″N 80°46′0″E / 9.28333°N 80.76667°E |
வகை | கடற்காயல் |
முதன்மை வரத்து | பேராறு |
முதன்மை வெளியேற்றம் | இந்து சமுத்திரம் |
அதிகபட்ச நீளம் | 14 கிலோமீட்டர்கள் (8.7 mi) |
அதிகபட்ச அகலம் | 5 கிலோமீட்டர்கள் (3.1 mi) |
குடியேற்றங்கள் | முல்லைத்தீவு |
நந்திக் கடல் (ஆங்கில மொழி: Nantikkaṭal) என்பது இலங்கையின் வடகிழக்கிலுள்ள முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கடற்காயல் ஆகும். இதன் அர்த்தம் சங்குகளின் கடல் என்பதாகும்.[1]. பேராறு உள்ளடங்கலாக சில ஆறுகள் இக்கடற்காயலில் கலக்கின்றன. முல்லைத்தீவு மாவட்டம் நந்திக்கடலுக்கும் இந்து சமுத்திரத்துக்கும் இடையில் அமைந்திருக்கிறது. இதனால் நந்திக்கடல் முல்லைத்தீவு கடற்காயல் என அழைக்கப்படுவதும் உண்டு.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவராக இருந்த வேலுப்பிள்ளை பிரபாகரன் இவ்விடத்தில் வைத்துக் கொல்லப்பட்டதாக இலங்கை அரசாங்கம் கூறியது. [2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Nanthikkadal". TamilNet. 6 March 2009. 23 May 2009 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ விடுதலைப் புலிகள் தலைவர் "பிரபாகரனை நந்திக் கடலிலிருந்து நாய் போல இழுத்து வந்தேன்": கோட்டாபய பேச்சு