நத்தம் பாளையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நத்தம் பாளையம் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர். நாயக்கர்கள் ஆட்சிக்காலத்தில் பாளையமாக இருந்தது. கி. பி. 10 ஆம் நூறாண்டில் பிராமணர்களும், வணிகர்களும் வாழ்ந்த பகுதியாக இது இருந்து வந்தது. கி.பி. 11 நூற்றாண்டில் ஆட்சி செய்த சுந்தர சோழ பாண்டியன் பிராமணர்களுக்கும் , வணிகர்களுக்கும் இப்பகுதியில் பல மானியங்களை தந்துள்ளதாக கல்வெட்டு கூறுகிறது. ”நத்தம்” பகுதியை விஜயநகரப் பேரரசின் நாயக்க மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் லிங்க நாயக்கர் ஆட்சி செய்துள்ளார். இவர் கட்டிய கோட்டை இன்றும் இடிந்த நிலையில் உள்ளது , பிறகு இப்பகுதிக்கு காவலுக்காக கள்ளர் மற்றும் வலயர்களை நியமித்துள்ளார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  • திண்டுக்கல் மாவட்ட தொல்லியல் கையேடு - முனைவர் சீதாராம் குருமூர்த்தி
"https://ta.wikipedia.org/w/index.php?title=நத்தம்_பாளையம்&oldid=3598612" இலிருந்து மீள்விக்கப்பட்டது