நக்கீரன் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நக்கீரன் (இதழ்)
ஆசிரியர்இரா. கோபால்
வகைசெய்தி, அரசியல்
இடைவெளிவாரம் இருமுறை
வெளியீட்டாளர்நக்கீரன் பப்ளிகேசன்ஸ்
தொடங்கப்பட்ட ஆண்டு1988
முதல் வெளியீடுஏப்ரல் 20, 1988 (1988-04-20)
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வலைத்தளம்nakkheeran.in

நக்கீரன் சென்னையில் இருந்து வெளியாகும் தமிழ் இதழாகும். இதனுடைய முதல் பதிப்பு 1988-ம் ஆண்டு ஏப்ரல் 20-ம் நாள் வெளியானது. நக்கீரன் கோபால் என்றழைக்கப்படும் ஆர். கோபால் இந்த இதழைத் தொடங்கினார்.

இவ்விதழின் பெயர் கே. சுப்பு என்பவரிடம் இருந்து கோபாலால் வாங்கப்பட்டது.[1] 1989-ம் ஆண்டு தேர்தல் கணிப்பினால் புகழ்பெறத்துவங்கியது. அதன்பிறகு சந்தனமரக் கடத்தல் வீரப்பன் உடன் நடந்த உரையாடல்கள், நேர்காணல்கள் காரணமாக இவ்விதழ் பிரபலமானது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "நக்கீரன் வரலாறு". நக்கீரன். Archived from the original on 2012-05-09. பார்க்கப்பட்ட நாள் மே 23, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நக்கீரன்_(இதழ்)&oldid=3863719" இலிருந்து மீள்விக்கப்பட்டது