த. ஸ்டாலின் குணசேகரன்
![]() | இந்தக் கட்டுரை கலைக்களஞ்சியத்தில் எழுதும் அளவு குறிப்பிடத்தக்கதா?
இத்தலைப்பைப் பற்றிய நம்பத்தக்க வேறு கூடுதல் மேற்கோள்களை இணைத்து இதனை "குறிப்பிடத்தக்கதாக" நிறுவிட உதவுங்கள். இவ்வாறு குறிப்பிடத்தக்க தன்மை நிறுவப்படாவிடின் இந்தக் கட்டுரை வேறு கட்டுரையுடன் இணைக்கப்படவோ, வழிமாற்றப்படவோ, நீக்கப்படவோ கூடும். |
![]() | இவ் வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரை மெய்யறிதன்மைக்காக மேலதிக மேற்கோள்களைக் கொண்டிருக்க வேண்டும். தயவு செய்து நம்பத்தகுந்த மூலங்களை இணைக்கவும். வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு ஆதாரமின்றி அல்லது தகுந்த ஆதாரமின்றி இருந்தால் உடனடியாக நீக்கப்பட வேண்டும். குறிப்பாக, அவதூறாக அல்லது பாதிப்பாக அது அமையக்கூடாது. (சூன் 2024) |
த. ஸ்டாலின் குணசேகரன் Stalin Gunasekaran. | |
---|---|
![]() | |
இயற்பெயர் | த. குணசேகரன் |
பிறப்பு | ஈரோடு, தமிழ்நாடு |
தொழில் | வழக்கறிஞர், எழுத்தாளர், மேடைப் பேச்சாளர் |
தேசியம் | இந்தியர் |
கல்வி நிலையம் | சிக்கய்ய நாயக்கர் கல்லூரி, ஈரோடு |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | விடுதலை வேள்வியில் தமிழகம் |
குறிப்பிடத்தக்க விருதுகள் |
|
இணையதளம் | |
http://tstalingunasekaran.com/ |

த. ஸ்டாலின் குணசேகரன் எழுத்தாளர். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த வழக்குரைஞர், மேடைப் பேச்சாளர் ஆவார். ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் “விடுதலை வேள்வியில் தமிழகம்” என்கிற ஆய்வு நூலைத் தொகுத்ததன் பலனாகச் சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்றுப்பதிவுகளைப் பதியச் செய்தவர். பொதுவுடமை, தேசிய உணர்வு, ஆகிய சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, அவற்றின் வழி வந்தவர். இவர் 2005 முதல் ஈரோடு நகரத்தில் புத்தகத் திருவிழாவை தொடர்ந்து ஆண்டுதோறும் நடத்தி வருகிறார். இவர் மே 2023 ஆண்டில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டர்.[1]
இளமை
[தொகு]பள்ளி மாணவனாக இருந்தபோது, “பாரதி இளைஞர் மன்றம்” என்கிற இளைஞர் அமைப்பைத் தோற்றுவித்தார். இந்த அமைப்பு வெள்ளி விழாக் கண்டுள்ளது. இவர் பகத்சிங் இளைஞர் மன்றம், இளைஞர் எழுச்சி இயக்கம், மக்கள் சிந்தனைப் பேரவை போன்ற பொது இளைஞர் அமைப்புகளையும் நிறுவி இவற்றின் வாயிலாக இந்திய இளைஞர்களுக்குத் தேசப்பற்றை ஏற்படுத்த பல்வேறு பணிகள் செய்து வருகிறார்.
1980 ஆம் ஆண்டில் சிக்கய நாயக்கர் கல்லூரி மாணவர் பேரவைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு, அதே ஆண்டில் பெரியார் மாவட்டத்தின் அனைத்துக் கல்லூரி மாணவர் பேரவைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார். 1985 ஆம் ஆண்டில், சோவியத் நாட்டின் தலைநகராகிய மாஸ்கோவில் நடைபெற்ற அகில உலக மாணவ இளைஞர் மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதிகளில் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டுக் கலந்து கொண்டார். அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாநிலத் தலைவராகவும், பல ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.
எழுத்தாளர்
[தொகு]“ஜீவா முழக்கம்” இதழில், பொன்விழா மலரைத் தயாரிக்கும் பொறுப்பு ஸ்டாலின் குணசேகரனுக்குத் தரப்பட்டது. அதற்காக இந்தியா முழுவதும் பயணம் செய்து ஆய்வுகள் மேற்கொண்ட போதுதான் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தமிழகத்தின் பங்கு பற்றி போதிய அளவு தெரிவிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. எனவே வரலாற்று ஆய்வாளர்கள், நிபுணர்கள், தேதியச் சிந்தனை மிக்க தலைவர்கள், தியாகிகள் என்று பலரையும் கண்டு அவர்கள் தந்த தகவல்களை வெவ்வேறு அறிஞர்களைக் கொண்டு கட்டுரையாக்கி “விடுதலை வேள்வியில் தமிழகம்” என்ற நூலை வெளியிட்டார்.
படைப்புகள்
[தொகு]- தேசவிடுதலையும் தியாகச் சுடர்களும் (தொகுப்பு நூல்)
- வரலாற்றுப் பாதையில்.... – தொகுதி 1, 2
- விடுதலை வேள்வியில் தமிழகம் - பாகம் 1, 2 (தொகுப்பு நூல்)