த. கோ. சாந்திநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

த. கோ. சாந்திநாதன் என்பவர் ஒரு மருத்துவரும் தமிழக எழுத்தாளரும் ஆவார். திண்டுக்கல் மாவட்டம், கலையம்புத்தூர் எனும் ஊரில் பிறந்த இவர் அரசு மருத்துவராகப் பல்வேறு மருத்துவமனைகளிலும், ஜிசாஸ், சவூதி அரேபியா ஆகிய நாடுகளிலுள்ள பொது மருத்துவமனைகளிலும் பணியாற்றி இருக்கிறார். பல அறிவியல் மாநாடுகளில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ள இவர், மருத்துவம் தொடர்பான 6 நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய “கண் மருத்துவ நோய்களும் நவீன மருத்துவமும்” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மருந்தியல் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கின்றது.

வெளிவந்த நூல்கள்[தொகு]

  • நவீன ஸ்கேன்களும் உட்கரு(நியூக்ளியர்) மருத்துவமும் (மணிமேகலை பிரசுரம்)[1]

ஆதாரம்[தொகு]

  1. http://books.dinamalar.com
"https://ta.wikipedia.org/w/index.php?title=த._கோ._சாந்திநாதன்&oldid=3614114" இலிருந்து மீள்விக்கப்பட்டது