தோ. ஜம்புகுமாரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தோ. ஜம்புகுமாரன் (பிறப்பு: மே 19, 1934) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். சென்னையில் வசித்து வரும் இவர் தமிழில் முதுகலைப் பட்டமும், கல்வியியலில் இளங்கலைப் பட்டமும், புலவர் பட்டமும் பெற்று, தலைமைத் தமிழாசிரியராகவும், உதவித் தலைமையாசிரியராகவும் பணியாற்றியவர். இவர் எழுதிய "பார்சுவநாத காவியம்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மரபுக்கவிதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோ._ஜம்புகுமாரன்&oldid=3614064" இலிருந்து மீள்விக்கப்பட்டது