தொன்மச் சோழர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மூவருலாவில் அடங்கியுள்ள விக்கிரம சோழன் உலா நூலில் அந்த நூலின் ஆசிரியர் ஒட்டக்கூத்தர் விக்கிரம சோழனுக்கு முன்னர் ஆண்டதாகச் சோழர் பரம்பரை ஒன்றைக் குறிப்பிடுகிறார். அவர்களில் பழங்கதைகளாகத் தெரியவரும் சோழர்களைத் தொன்மச் சோழர் எனக் குறிப்பிடுகிறோம். இவர்களில் வரலாற்றுச் சோழர்களாகத் தெரியவரும் சோழர்களும் உள்ளனர்.

தலைப்பினைக் கருத்தில் கொண்டு தொன்மச் சோழர் பெயர்கள் ஒற்றை உடுக்குறி (*) இட்டும், வரலாற்றுச் சோழர்கள் இரட்டை உடுக்குறி (**) இட்டும் இங்குக் காட்டப்படுகின்றனர். வரிசை பாடலில் காட்டப்பட்டுள்ள முறையைப் பின்பற்றி அமைக்கப்பட்டுள்ளது.

சோழ அரசர்கள்[தொகு]

  • பிரமன், உலகம் படைத்தவன்
  • காசிபன், பிரமன் மகன்
  • மரீசி, மேதக்க மையறு காட்சியன்
  • சூரியன், எல்லாளன், ஒற்றைச் சக்கரத் தேரில் வருவோன்
  • மனுச்சோழன், பசுவுக்கு நீதி வழங்கியவன் [1]
  • ஆடுதுறை அறனாளன், புலியும் மானும் ஒரே துறையில் நீருண்ணச் செய்தவன் [2]
  • வானூர்தி அரசன்
  • தேவருலகைக் காத்தவன்
  • வேள்வியில் பெற்ற மந்திரத்தைக் கூற்றுவனுக்குச் சொல்லிக்கொடுத்தவன்,
  • முதுமக்கள்-தாழி செய்தளித்து எமனை வென்றவன்
  • தூங்கும் எயில் எறிந்த சோழன்
  • மேலைக்கடல் நீரைக் கீழைக்கடலில் பாயச்செய்தவன்
  • நாக-கன்னியை மணந்தவன், குகை வழியே நாகலோகம் சென்றவன்
  • சிபிச் சக்கரவர்த்தி, தான் வளர்த்த புறாவுக்காகத் தன்னையே தராசில் நிறுத்துப் பருந்துக்கு இரையாக அளித்தவன்
  • காவிரி தந்தவன், குடகு மலையைப் பிளந்து காவிரியாற்றைச் சோழநாட்டில் பாயச் செய்தவன்
  • இமயத்தில் தன் ஆண்-புலிச-சின்னத்தைப் பொறித்தவன்
  • காவிரியாற்றுக்குக் கரை கட்டியவன்
  • தொண்ணூற்றாறு விழுப்புண் கொண்ட சோழன்
    • தில்லைக்குப் பொன் வேய்ந்தவன்.
    • ஒரே பகலில் 18 பாலைநிலங்களையும், மலைநாட்டையும் (சேரநாட்டையும்) வென்றவன்
    • கங்கையையும், கடாரத்தையும் தன் படையை அனுப்பி வென்றவன்
    • வங்கநாட்டுக் கல்யாணபுரத்தை மூன்று முறை தாக்கி அழித்தவன்
    • கொப்பத்துப் போரில் ஆயிரம் யானைகளை வென்றவன்.
    • திருவரங்கப் பெருமானுக்கு மணிகளாலான பாம்புப்படுக்கை அமைத்துக் கொடுத்தவன்
    • கூடல் சங்கமப் போரில் 1000 யானைகளை வெட்டி வீழ்த்திப் பரணி நூல் கொண்டவன்

இவர்களுக்குப் பின்னர் அரியணை ஏறியவன் விக்கிரம சோழன். [3]

அடிக்குறிப்பு[தொகு]

  1. இவர் குலத்தோன், மென் புறவின் \ மன் உயிர்க்கு, தன் உயிரை மாறாக வழங்கினனால்! (கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 12. வரலாற்றுப் படலம் 9)
  2. புலிப் போத்தும் புல்வாயும் \ ஒரு துறையில் நீர் உண்ண, உலகு ஆண்டான் உளன் ஒருவன் (கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 12. வரலாற்றுப் படலம்) 7
  3. விக்கிரமசோழன் உலா
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொன்மச்_சோழர்&oldid=2492651" இலிருந்து மீள்விக்கப்பட்டது