உள்ளடக்கத்துக்குச் செல்

தொட்டா ஆலத மரா

ஆள்கூறுகள்: 12°54′34″N 77°23′44″E / 12.90944°N 77.39556°E / 12.90944; 77.39556
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொட்டா ஆலத மரா
மரத்தினுடைய வேர்
வகைஆலமரம் (ஆல்)
இடம்கேட்டோஹள்ளி, பெங்களூரு, கருநாடகம், இந்தியா
ஆள்கூறுகள்12°54′34″N 77°23′44″E / 12.90944°N 77.39556°E / 12.90944; 77.39556
விதைக்கப்பட்டது17ம் நூற்றாண்டு

தொட்டா ஆலத மரா என்னும் பெரிய ஆலமரம், 400 ஆண்டுகள் பழமையான ஆலமரமாகும். இது கருநாடகத்தின் பெங்களூருவில் உள்ள கேட்டோஹள்ளி என்ற கிராமத்தில் உள்ளது.[1] இந்த ஒற்றை மரம் சுமார் 3 ஏக்கர் (12,000 சதுர மீட்டர்) பரப்பளவில் அமைந்துள்ளது.

இம்மரத்தினுடைய முக்கியத்தண்டானது 2000-களில், ஏதோ ஒரு இயற்கை நோயினால் பாதிக்கப்பட்டு அழிந்துவிட்டது, தற்போது இதனுடைய கிளைகளைக்கொண்டு வாழ்ந்து வருகிறது.

சுற்றுலா

[தொகு]

இப்பெரிய ஆலமரமானது பெங்களூரில் இருந்து 28 கி.மீ. தொலைவில் பெங்களூரு-மைசூரு நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது[1].மெஜஸ்டிக்கிலிருந்து, கெங்கேரி வரையிலும் பேருந்து வாயிலாக சென்றால், கெங்கேரியில் இருந்து தொட்ட ஆலட மராவிற்குப் பேருந்து வசதிகள் உள்ளன. கே. ஆர். மார்க்கெட்டிலிருந்து நேரடிப்பேருந்து வசதியும் உள்ளது.

பெரிய ஆலமரம்

படக்காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "10 trees may get heritage status in Karnataka". Business Line. 2010-08-05. Retrieved 2013-08-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொட்டா_ஆலத_மரா&oldid=4251739" இலிருந்து மீள்விக்கப்பட்டது