தொட்டல்லா
Jump to navigation
Jump to search
தொட்டல்லா என்பது காவிரி ஆற்றின் துணை ஆறாகும். இந்த ஆறானது கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வனச்சரகத்தில் உள்ள குந்துகோட்டை மலைப்பகுதியில் காட்டாறாக தோன்றுகிறது. பெரும்பாலும் இந்த காட்டாற்றில் தென்மேற்கு பருவ மழைக் காலத்தில் வெள்ளம் ஏற்படுகிறது. இந்த ஆற்றின் நீர்பிடிப்புப் பகுதியானது அஞ்செட்டி, உரிகம் ஆகிய இரண்டு வனச்சரகங்களில் உள்ள சுமார் 55 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு ஆகும்.[1] இந்த இரு வனச்சரகங்களின் இடையே சுமார் 46 கி.மீ. நீளம் தொட்டல்லா காட்டாறு பாய்ந்து ஒகேனக்கலுக்கு முன்பாக 15 கி.மீ தொலைவில் உள்ள ராசிமணல் அருகே காவிரி ஆற்றில் கலக்கிறது. இந்த ராசிமணல் பகுதியில் ராசிமணல் தொட்டல்லா ஆறு அணைகட்டு என்ற திட்டத்தின்படி அணைகட்ட முடிவு செய்து 1961ல் காமராஜரால் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் திட்டம் நிறைவேற்றபடவில்லை.[2]