தேவையந்தாதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேவையந்தாதி [1] என்னும் நூலைத் தாம் செய்ததாக 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கயாதரர் தம் கயாதர நிகண்டு நூலில் இரண்டு பாடல்களில் குறிப்பிடுகிறார். அந்தப் பாடல்கள்

1

மேவும் அரும்பொருள் அந்தாதி கேட்டு இந்த மேதினியோர்
தாவும் வினை கெடச் சாற்றிய தென் தமிழ் தேவை மன்னும்
கோவை இராமீச்சுரக் கொவை சொன்ன குருபரன் [2]

2

அரும்பொருள் அந்தாதி சூடிய சீதரன் அம்பிகையைத்
தரும்பொருள் செய்த பராபரையான் தினம் தண்டமிழோர்
விரும்பிய கோவை உரிச்சோல் பனுவல் விரித்துலைத்தான் [3] [4]

இந்த அந்தாதியும், கோவையும் இன்று கிடைக்கவில்லை.

அடிக்குறிப்பு[தொகு]

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 76. 
  2. பாடல் 402
  3. பாடல் 566
  4. சு. வையாபுரிப்பிள்ளை பதிப்பு கயாதரம், சென்னைப் பல்கலைக் கழக வெளியீடு, 1939
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவையந்தாதி&oldid=1446396" இலிருந்து மீள்விக்கப்பட்டது