தேரபுத்தபாய

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

"ரோஹணா" என்னும் பெயருள்ள ஒருவன் கோதமலைக்கருகில் உள்ள "கிட்டி" என்னும் கிராமத்தின் தலைவனாக இருந்தான். இவன் தனக்கு பிறந்த பிள்ளைக்கு "கோதாபயன்" என்று பெயரிட்டான்.

தேரபுத்திர அபயன்

பிள்ளைபருவம்[தொகு]

ஒரு பத்து 12 வயதாகும் போது மிகுந்த பலம் பெற்றவனாயிருந்தான். விளையாடும்போது நாலைந்து பேர் சேர்ந்து கூட தூக்கமுடியாத கற்களையும் அனாவசியமாக தூக்கி எறியும் பலம் பெற்றவனாயிருந்தான்.

அவனுடைய தந்தை அவனுக்கு 16 வயதானபோது , 38 அங்குல சுற்றளவும் 16 முழ நீளமும் உள்ள கதாயுதமொன்றை செய்து கொடுத்தார். இதைக்கொண்டு பெரிய பனைமரங்களை தென்னை மரங்களையும் அடித்து வீழ்த்துவான். இதனால் இவன் பெரும் வீரன் என புகழ்பெற்றான்.

பெயரின் காரணம்[தொகு]

"ரோஹணா", கோதாபயனுடைய தந்தை "மகாசும்ம" தேரருடைய ஆதரவாளனாயிருந்தான். ஒருமுறை கோத்தபர்வத விகாரையில் மகாசும்ம தேரருடைய உபதேசத்தை கேட்டபோது முதல் நிலையான "சோடபதி(விமோசம் பெறுதல்)" நிலையை பெற்றான். அதன் பிற்பாடு மனம் நெகிழ்ந்தவனாக குடும்பத்தலைமையை மகனிடம் ஒப்படைத்துவிட்டு மஹாஹம்ம தேரரிடம் தீட்சை பெற்றான்.

அதன் பிற்பாடு தியானப்பயிற்சி மூலம் "அரஹந்தர்" ஆவதற்கு தன்னை தகுதியுடையவனாக்கிக்கொண்டான். இதன்மூலம் "தேரரின் புத்திரன்" எனும் அர்த்தத்தில் "தேரபுத்திரபயன்" என அழைக்கப்பட்டான்.

ஆதாரங்கள் மற்றும் மேற்கோள்கள்[தொகு]

[1]

[2]

  1. "மகாவம்சம் - நூலகம்". noolaham.org. பார்க்கப்பட்ட நாள் 2022-08-20.
  2. "மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம் - நூலகம்". noolaham.org. பார்க்கப்பட்ட நாள் 2022-08-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேரபுத்தபாய&oldid=3532342" இலிருந்து மீள்விக்கப்பட்டது