தேமுது குன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சங்ககாலத் தமிழர் பொருள் தேடச் செல்லும்போது தேமுதுகுன்றத்தைத் தாண்டிச் செல்வர் என மாமூலனார் குறிப்பிடுகிறார்.

இந்தக் குன்றநாட்டு அரசன் கண்ணன் எழினி. இவன்மீது படையெடுக்கவேண்டும் என இவனது பகைவர் நினைத்தவுடனேயே இவன் தன் பகைவர்களைத் தாக்கிப் புறமுதுகிட்டு ஓடச்செய்தான்.[1]

அடிக்குறிப்பு[தொகு]

  1. முனை எழ முன்னுவர் ஓட்டிய முரண் மிகு திருவின் மறம் மிகு தானைக் கண்ணன் எழினி தேமுதுகுன்றம் இறந்தனர் ஆயினும் நீடலர் – மாமூலனார் பாடல் அகநானூறு 197
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேமுது_குன்றம்&oldid=940463" இலிருந்து மீள்விக்கப்பட்டது