தேனி (திருக்குர்ஆன்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சூரா தேனீக்கள் (Bees அல்லது Sūrat an-Naḥl, அரபு மொழி: سورة النحل‎) என்பது திருக்குர்ஆன் உடைய 16ஆவது சூரா (அத்தியாயம்) ஆகும். இது தேனீக்கள் என்னும் 128 வசனங்களைப் பெற்றுள்ளது. 

தொகுப்பு[தொகு]

இந்த சூராவானது பல கடவுட் கொள்கைக்கு எதிராக எச்சரிக்கை அளிப்பதாக உள்ளது. பொய்க்கடவுளர்கள் அல்லது அவற்றை வழிபடுவோர் எதையும் புதியதாக படைக்க முடியாது. ([திருக்குர்ஆன் 16:20]), மேலும் அல்லாவுக்கு எதிராக மனிதனால் படைக்கப்பட்ட எதையும் அல்லாவுடன் ஒப்பிடவும் கூடாது ([திருக்குர்ஆன் 16:74]). இது அல்லாஹ்வால் மனிதனுக்கு வழங்கப்பட்ட மற்றும் அதன் வளங்கள் ஆகியவற்றின் பொருட்டு அல்லாஹ்வைப் போற்றிப் பாடும் புகழ்மாலையாக அமைந்துள்ளது. இந்த சூராவின்படி கடல்கள், விண்மீன்கள், மலைகள் போன்ற, உலகில் உள்ள இயற்கையின்  அதிசயங்கள் இறைவனின் முடிவிலா சக்திக்கு சாட்சிகளாக உள்ளன ([திருக்குர்ஆன் 16:14]).

திருக்குரான் உடைய 66வது வசனமானது கால்நடைகளில் பால் உற்பத்தியாகும் அற்புதம் பற்றி விளக்குகிறது: "இறைவனால் கால்நடைகளின் உடலில் கழிவுப்பொருட்கள் மற்றும் இரத்தம் இவற்றுக்கிடையிலிருந்து குடிப்பதற்கு ஏற்ற, தூய்மையான, அதனை அருந்துபவர்களுக்கு ஒத்துக்கொள்ளக்கூடிய, பால் உற்பத்தி செய்யப்படுகிறது". 

திருக்குரான் உடைய 67வது வசனமானது கொடிகளின் அற்புதம் பற்றி விளக்குகிறது:

'பேரீச்சை மரங்களிலிருந்தும், கொடிகளிலிருந்தும் உங்களுக்கு செறிவூட்டப்பட்ட பானங்களும், முழுமையாக்கப்பட்ட உணவும் கிடைக்கச் செய்துள்ளோம். இதுவும் அறிவுக்கூர்மை உள்ளவர்களுக்கு நாம் வழங்கும் அறிகுறியாகும்'

வசனம்[திருக்குர்ஆன் 16:103] திருக்குர்ஆன் என்பது முகமது என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு சாட்டியுரைத்தலுக்கு விளக்கம் அளிப்பதாக அமைந்துள்ளது

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேனி_(திருக்குர்ஆன்)&oldid=3369816" இலிருந்து மீள்விக்கப்பட்டது