தேசிய மக்கள் தொகை கொள்கை 2000 (இந்தியா)
தேசிய மக்கள் கொள்கை 2000 (National Population Policy 2000) என்பது இந்திய அரசு 2010 ஆம் ஆண்டில் எட்டப்பட வேண்டிய வகையில் சில இலக்குகளைக் கொண்டு செயல்படுத்தப்பட்ட நலத்திட்டமாகும்.
சிறப்பம்சம்[தொகு]
இக் கொள்கை மக்கள் தொகை பற்றிய இலக்குகள் மட்டுமின்றி குழந்தை நலம், மகளிர் கல்வி, எய்ட்சு கட்டுப்பாடு போன்றவை குறித்த இலக்குகளையும் முன்வைத்தது.
2010 ஆம் ஆண்டுக்கான இலக்குகள்[தொகு]
- இன்னும் எட்டப்படாமல் இருக்கும் அடிப்படை இனப்பெருக்க மற்றும் குழந்தை நலச் சேவைகளுக்கான அடிப்படைக் கட்டுமான அமைப்பை ஏற்படுத்துதல்
- 14 வயது வரை பள்ளிக் கல்வியை அனைவருக்கும் இலவசமாயும் கட்டாயமாகவும் ஆக்குதல்
- குழந்தை இறப்பு விகிதத்தை ஆயிரத்துக்கு முப்பதாய்க் குறைத்தல்
- தாய்மை இறப்பு விகிதத்தை இலட்சதுக்கு நூறாய்க் குறைத்தல்
- மொத்த கருத்தரிப்பு வீதத்தை 2.1 ஆய்க் குறைத்தல்
- ஆயுர்வேதம், சித்த மருத்துவம் (AYUSH) ஆகிய பாரம்பரிய மருத்துவமுறைகளை உயிர்ப்பித்தல்
- எல்லா வரும் முன் காக்கக் கூடிய நோய்களுக்கும் தடுப்பூசியை (தடுப்பு மருந்து) அனைத்துக் குழந்தைகளும் பெறும் படி செய்தல்
- பெண்களின் திருமண வயதை 20க்கு மேல் உயர்த்துதல்
- 80 விழுக்காடு மகப்பேறு மருத்துவமனைகளில் நடக்கும் வகை செய்தல்
- பிறப்பு, இறப்பு மற்றும் திருமணங்களை 100 விழுக்காடு பதிவு செய்தல்
- எய்ட்சு பரவுதலைக் கட்டுக்குள் வைத்தல் மற்றும் பால்வழித் தொற்று நோய் மருத்துவத்திற்கும் தேசிய எய்ட்சு கட்டுப்பாட்டு அமைப்பிற்கும் இடையே அதிக ஒருங்கிணைவுச் செயல்பாடுகளை ஏற்படுத்துதல்.
- தொற்று நோய்களைத் தடுத்தல் மற்றும் கட்டுக்குள் வைத்தல்
- சிறு குடும்ப விதியைத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தல்
- சமூகஞ் சார் திட்டங்களை மையப்படுத்துவதன் மூலம் குடும்ப நலம் ஒரு மக்கள் இயக்கமாக மாறும் வண்ணம் செய்தல்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "2010 ஆம் ஆண்டிற்கான குறிக்கோள்கள்". Archived from the original on 2011-02-23. பார்க்கப்பட்ட நாள் 2011-03-29.
வெளியிணைப்புகள்[தொகு]
இந்திய அரசின் மக்கள் தொகை ஆணையத்தின் இணையத்தளம் பரணிடப்பட்டது 2011-02-21 at the வந்தவழி இயந்திரம்