தேசிய நெடுஞ்சாலை 181 (National Highway 181 (India)), பொதுவாக தே. நெ. 181 எனக் குறிப்பிடப்படுகிறது. இது தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூர் நகரத்தைத் தென்னிந்தியாவின்கர்நாடக மாநிலத்தில் உள்ள குண்ட்லுப்பேட்டையுடன் இணைக்கும் ஒரு நெடுஞ்சாலை ஆகும்.[1]மைசூர் நகரம் ஊட்டியுடன் நஞ்சனகூடு, குண்டலுபேட்டை, பந்திப்பூர் மற்றும் கூடலூர் வழியாக இணைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 181 பந்திப்பூர் புலிகள் காப்பகம் (தேசிய பூங்கா) மற்றும் முதுமலை புலிகள் காப்பகம் வழியாகச் செல்கிறது. எனவே இரவில் வாகன போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. யானை, காட்டெருமை, கரடி, புலி மற்றும் சிறுத்தை போன்ற வன விலங்குகள் இந்தப் புலிகள் காப்பகப் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் சில நேரங்களில் காணப்படுகின்றன. தே. நெ. 181 ஊட்டிக்குப் பிறகு குன்னூர், மேட்டுப்பாளையம், காரமடை வழியாகக் கோயம்புத்தூர் நகரில் முடிகிறது.