தேசிகமாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேசிக மாலை என்னும் பெயர் கொண்ட நூல் ஒன்று இருந்தது என்பதை உரைநூல்கள் குறிப்பிடுகின்றன. இது 10 ஆம் நூற்றாண்டில் தோன்றியது.

இந்த நூலின் பாடல்கள் அந்தாதித் தொடையால் அமைந்திருந்தன. [1]

இந்த நூலின் பாடல்கள் பஃறொடை வெண்பாக்களால் ஆனவை. [2]

கருவிநூல்[தொகு]

மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பத்தாம் நூற்றாண்டு, பதிப்பு 2005

அடிக்குறிப்பு[தொகு]

  1. பன்மணி மாலையும் மும்மணிக் கோவையும், உதயணன் கதையும், தேசிக மாலையும் முதலாக உடைய தொடர்நிலைச் செய்யுட்களும் அந்தாதியாய் வந்தவாறு கண்டுகொள்க. யாப்பருங்கல விருத்தி உரையாசிரியர் குறிப்பு
  2. ஏழடியின் மிக்க பஃறொடை வெண்பாக்களை யாப்பருங்கல விருத்தியுள்ளும், தேசிக மாலை முதலியவற்றுள்ளும் கண்டுகொள்க. குணசாகரின் யாப்பருங்கலக் காரிகை உரை
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசிகமாலை&oldid=1411718" இலிருந்து மீள்விக்கப்பட்டது