தெறுழ்வீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தெறுழ் என்னும் மலர் சொல்லமைதியில் எறுழம் என்னும் மலரைப் போன்றது.
தெறுழ் மலர் மழை தொடங்கும் காலத்தில் புதர் புதராகப் பூத்துக் குலுங்கும் எனச் சங்கப்பாடல் தெரிவிக்கிறது.[1]

வீ
பூத்தபின் ஒருநாள் மட்டுமே வாழ்ந்து நிலத்தில் கொட்டிவிடும் பூக்களுக்கு 'வீ' என்று பெயர்.
நறைநிறம்
நறை என்பது பழங்களை நுரைக்கும்படி ஊறவைத்து இறக்கும் மணமுள்ள கள் (wine). இதன் நிறந்தான் தெறுழ் மலரின் நிறம்.

இவற்றையும் பார்க்க[தொகு]

சங்ககால மலர்கள்

அடிக்குறிப்பு[தொகு]

  1.  
    நன்றும்
    வருமழைக்கு எதிரிய மணிநிற இரும்புதல்
    நறைநிறம் படுத்த நல் இணர்த் தெறுழ் வீ
    தாஅம், தேரலர் கொல்லோ - நற்றிணை 302

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெறுழ்வீ&oldid=1068912" இருந்து மீள்விக்கப்பட்டது