தென்மராட்சி கல்வி வலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தென்மராட்சி கல்வி வலயம் (Thenmarachchy educational zone) இலங்கை கல்வி அமைச்சின் கீழ் இயங்கி வரும் ஓர் கல்வி வலயம் ஆகும். இது இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்துள்ள 12 கல்வி வலயங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது.[1] இக்கல்வி வலயம் தனக்கு உட்பட்ட பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளைப் பரிபாலித்தல், நிர்வகித்தல் போன்ற செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் பரீட்சைகள் நடாத்துதல், ஆசிரியர், அதிபர்களை நியமித்தல் போன்ற செயற்பாடுகளையும் இக்கல்வி வலயமே மேற்கொண்டு வருகின்றது. இக்கல்வி வலயத்தில் ஒரு கோட்டமே அமைந்துள்ளது. அது சாவக்கச்சேரி என அழைக்கப்படுகின்றது.[2] இதன் தற்போதைய பணிப்பாளர் திரு. என். கிருஷ்ணகுமார் ஆவார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "It works under the Ministry of Education, Sri Lanka". Archived from the original on 20 ஜனவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 1 January 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. http://www.edumin.np.gov.lk/18-zonemaps/27-thenmaradchchy-zone-map.html. பார்க்கப்பட்ட நாள் 1 January 2017. {{cite web}}: Missing or empty |title= (help)
  3. "Director of the zone". பார்க்கப்பட்ட நாள் 1 January 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்மராட்சி_கல்வி_வலயம்&oldid=3559164" இலிருந்து மீள்விக்கப்பட்டது