தென்னம்புலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய நாட்டில் தமிழ்நாடு மாநிலத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் தென்னம்புலம் ஆகும். இயற்கை எழில் சூழ்ந்த அமைதியான கிராமம். இக்கிராமம் வேதாரண்யம் ஒன்றியம் செண்பகராய நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்டது. விவசாயமே முக்கியமான தொழிலாகும். மழையை நம்பியே விவசாயம் நடைபெறுகிறது. அருள்மிகு மழை மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.

மாரியம்மன்கோவில்[தொகு]

திருவிழா வைகாசி மாதம் ஒன்பது நாட்கள் சிறப்பாக நடைபெறும்.வைகாசி விசாகம் நட்சத்திரத்தில் தேர்த்திருவிழா நடைபெறும். தேர்த்திருவிழா வில் பெண்கள் ஒரு பகுதியிலும் ஆண்கள் ஒரு பகுதியிலும் நின்று தேர் இழுக்கும் அரிய காட்சியை இங்கு காணலாம் இஸ்லாமியர்களும் இதில் கலந்து கொள்வார்கள் இது சமூக நல்லிணக்கத்தை பேனுவது மிகவும் சிறப்பாக இருக்கும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்னம்புலம்&oldid=3278617" இலிருந்து மீள்விக்கப்பட்டது