தூத்சாகர் அருவி
பாற்கடல் அருவி என்னும் நேரடிப் பொருளுடைய தூத்சாகர் அருவி (Dudhsagar Falls) இந்தியாவிலுள்ள கோவாவில், மண்டோவி ஆற்றில் அமைந்துள்ளது. இது கோவா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் எல்லைக்கு அருகில் பனாஜியில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
தூத்சாகர் அருவி, மண்டோவி ஆற்றின் மேல் பகுதியில் அமைந்துள்ளதால், வரண்ட காலங்களில் கவர்ச்சியாக இருப்பதில்லை. எனினும், மழைக் காலங்களில் இந்தியாவின் வலுமிக்க அருவிகளில் ஒன்றாக மாறுகிறது. 310 மீட்டர் உயரம் கொண்ட இது இந்தியாவின் ஐந்தாவது உயரமான அருவியாக உள்ளதுடன், உலகின் உயர்ந்த அருவிகளில் 227 ஆவது இடத்திலும் உள்ளது.
மேலும் பார்க்க[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
- தூத்சாகர் அருவி (World Waterfall database) பரணிடப்பட்டது 2011-06-11 at the வந்தவழி இயந்திரம் - (ஆங்கில மொழியில்)