துளசி சுந்தரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துளசி சுந்தரம் (பி: 1942) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் ஓய்வு பெற்ற தமிழாசிரியையும் கூட.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1958 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள் கட்டுரைகள் ஆகியவற்றையே எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்[தொகு]

  • "பிள்ளை நிலா" (சிறுகதைகள், 1997)

பரிசுகளும் விருதுகளும்[தொகு]

  • பணமுடிப்பு - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் (1983);
  • பஹாங் மாநிலச் சிறந்த எழுத்தாளர் பணமுடிப்பு (1986);
  • முதல் பரிசு - பாரதிதாசன் குழுவினரின் எழுத்தாளர் தினக் கட்டுரைப் போட்டி (1994)
  • எழுத்தாளர் சங்கத் தங்கப் பதக்கம் (1997).

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துளசி_சுந்தரம்&oldid=3216958" இலிருந்து மீள்விக்கப்பட்டது