துர்காபர் காயசுதா
துர்காபர் காயசுதா Durgabar Kayastha | |
|---|---|
| பிறப்பு | 1515 காமாக்யா, காமரூபம் |
| இறப்பு | 1560 (அகவை 44–45) |
| தொழில் | கவிஞர் |
| மொழி | அசாமிய மொழி |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | பெகூலா உபாக்யானா |
துர்காபர் காயசுதா (Durgabar Kayastha) இந்தியாவின் அசாம் மாநிலத்தில் காமரூபம் மண்டலம் காமக்யா பகுதியைச் சேர்ந்த ஓர் இலக்கியவாதி ஆவார். இவர் நன்கு அறியப்பட்ட மானசா கவிஞராகவும் 16-ஆம் நூற்றாண்டின் சிறப்பு மிக்க ஓஜா வல்லுநராகவும் இருந்தார்.[1]
இவரது முக்கிய படைப்புகளில் ஒன்றான பெகூலா உபாக்யானா, பெகூலா மற்றும் சந்த் சதாகர் கதைகளை விவரிக்கிறது. பதின்மூன்றாம் நூற்றாண்டில் சுகவி நாராயணனும் பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் துர்காபரும் இந்தப் பாடல்களை எழுதுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, இந்தக் கதையுடன் தொடர்புடைய பாடல்வரிகள் மேற்கு காமரூபத்திலும் வட வங்காளத்தின் பிற பகுதிகளிலும் புழங்கி வந்தன. துர்காபர் இயற்றிய பாடல்கள் துர்காபரி என்று அழைக்கப்படுகின்றன. துர்காபர் காயசுதா மாதவ கந்தலியின் இராமாயணத்தை பாடல்களாக இயற்றினார். தானும் புதிதாகச் சில பாடல்களைப் புனைந்தார். இவை அனைத்தும் சேர்த்து மொத்தம் ஐம்பத்தெட்டு பாடல்கள் உள்ளன. இந்தப் பாடல்கள் வெவ்வேறு மரபார்ந்த ராகங்களின் அடிப்படையில் இசைக்கப்பட்டன. துர்காபர் காயசுதா ஓஜாபாலி நாட்டுப்புற நடனத்தில் இசைக்கும் வகையில் இராமாயணத்தை இயற்றினார். [2]