துரை கிருஷ்ணமூர்த்தி
தோற்றம்
துரை கிருஷ்ணமூர்த்தி | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1985–1989 | |
| முன்னையவர் | சு. நடராசன் |
| பின்னவர் | எஸ். என். எம். உபயத்துல்லா |
| தொகுதி | தஞ்சாவூர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 4 நவம்பர் 1954 தஞ்சாவூர் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| தொழில் | விவசாயி |
துரை கிருஷ்ணமூர்த்தி (Durai Krishnamurthy ) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டம் கீழவாசல் பகுதியினைச் சேர்ந்தவர். பள்ளிக் கல்வியினை முடித்துள்ள கிருஷ்ணமூர்த்தி, இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்தவர். இவர், 1984ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]