தீயனூர் ஜமதக்னீஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவார வைப்புத் தலம்
தீயனூர் ஜமதக்னீஸ்வரர் திருக்கோயில்[1]
பெயர்
புராண பெயர்(கள்):தீயனூர், அக்னீச்சுரம் , மனுகுலகேசரிநல்லூர், சோழ கேரள நல்லூர், வானவன்தேவி சதுர்வேதி மங்கலம்[1]
பெயர்:தீயனூர் ஜமதக்னீஸ்வரர் திருக்கோயில்[1]
அமைவிடம்
ஊர்:தீயனூர் (உடையவர் தீயனூர்)
மாவட்டம்:அரியலூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:ஜமதக்னீஸ்வரர்
தாயார்:அமிர்தாம்பிகை
தல விருட்சம்:வில்வம்
தீர்த்தம்:அக்னி தீர்த்தம்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கல்வெட்டுகள்:பல கல்வெட்டுகள்
தேவார வைப்புத் தலப்பாடல் பாடியவர்கள்:அப்பர்

தீயனூர் ஜமதக்னீஸ்வரர் திருக்கோயில் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்தில் அமைந்துள்ள சிவபெருமான் திருக்கோயில் ஆகும். பழைமையான தேவார வைப்புத் தலம். [கு 1]

தலவரலாறு[தொகு]

பரசுராமரின் தந்தையான ஜமதக்னி முனிவர் வில்வ மரங்கள் நிறைந்து வில்வ வனமாக இருந்த இப்பகுதியில் வந்து சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார். இதனால் இத்தல சிவபெருமான் ஜமதக்னீஸ்வரர் என்றழைக்கப்பட்டார்.[1]

கல்வெட்டுகள் மூலம் வரலாறு[தொகு]

கங்கைகொண்ட சோழபுரம் அமைத்த முதலாம் ராஜேந்திர சோழனின் மூத்த மகன் முதலாம் ராஜாதி ராஜன் (1018-1053) ஆட்சிகால கல்வெட்டுகளில் இந்த ஊரின் வரலாற்றுச் சிறப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அரண்மனைகள், அன்னதானக் கூடங்கள் என இவ்வூர் மிகப்பெரிய நகராக அமைந்திருந்ததை கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.[1]

கும்பாபிஷேகம்[தொகு]

இந்து சமய அறநிலையத் துறையால் நிர்வாகிக்கப்படும் இத்திருக்கோயிலில் 22.05.1968 ஆம் வருடமும் 42 வருடங்களுக்குப் பின்னர் ஊர்மக்கள் மற்றும் வெளியூர் பக்தர்கள் உதவியுடன் மதில்சுவர்கள் பராமரிப்பு பணிகள் முடியுமுன்னர் 8.5.2011 ஞாயிற்றுக்கிழமையும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.[2]

புதிய பைரவர்[தொகு]

இத்திருக்கோயில் முன்பு கவனிப்பாரற்று போக ஆரம்பிக்க இருந்த காலகட்டத்தில் இருந்து வந்த காலபைரவர் சிலை தற்போது காணப்படாததால் 2011 வருட கும்பாபிஷேக சமயம் புதிய பைரவர் சிலை அமைக்கப்பட்டது. பழைமையான காலபைரவர் சிலை திருடப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகின்றது.[2]

குறிப்புகள்[தொகு]

  1. பு.மா.ஜெயசெந்தில்நாதன் நூலில் (தேவார வைப்புத் தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை) உள்ள 147 தலங்களின் பெயர்களைக் கொண்ட பட்டியலில் இத்தலத்தின் பெயர் காணப்படவில்லை. இது தேவார வைப்புத்தலமா என்பது உறுதி செய்யப்படவேண்டியுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 குமுதம் ஜோதிடம்; 20.05.2011;தீவினைகள் தீர்க்கும் தீயனூர் ஜமதக்னீஸ்வரர்; பக்கம் 2-4
  2. 2.0 2.1 குமுதம் ஜோதிடம்; 20.05.2011; பக்கம் 4