தீத்தாரியப்பப்பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தீத்தாரியப்பப்பிள்ளை [1] என்பவர் விஜயநகரப் பேரரசின் மன்னனாக விளங்கிய அச்சுத தேவ ராயனின் பிரதிநிதியாக விளங்கித் தமிழ்நாட்டுப் பகுதிகளை ஆண்டுவந்த வெங்காள நாயக்கர் காலத்தில் ஆட்சி அலுவலராக விளங்கியவர். வீரமாலை என்னும் தமிழ்நூல் பாடியதற்காக அந்த நூலைப் பாடிய புலவர் பாண்டி கவிராசருக்கு இறையிலியாக [2] நிலம் வழங்கியவர்.

காஞ்சிபுரத்தில் வாழ்ந்தவர். தொண்டை மண்டலத்து நரசிங்கபுரத்தில் [3] தம் அரசர் அச்சுதராயர் புண்ணியமாக லட்சுமி நரசிம்மன் கோயில் கட்டுவித்தவர்.

அடிக்குறிப்பு[தொகு]

  1. மு. அருணாசலம். தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014, முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005. பக். 267. 
  2. வரி இல்லாமல் உழுதுண்ணும் மானியமாக
  3. சென்னையை அடுத்துள்ள நரசிங்கபுரம் கோயில்[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீத்தாரியப்பப்பிள்ளை&oldid=3359093" இலிருந்து மீள்விக்கப்பட்டது