தி. மு. அப்துல் காதர்
தோற்றம்
இந்தக் கட்டுரை கலைக்களஞ்சியத்தில் எழுதும் அளவு குறிப்பிடத்தக்கதா?
இத்தலைப்பைப் பற்றிய நம்பத்தக்க வேறு கூடுதல் மேற்கோள்களை இணைத்து இதனை "குறிப்பிடத்தக்கதாக" நிறுவிட உதவுங்கள். இவ்வாறு குறிப்பிடத்தக்க தன்மை நிறுவப்படாவிடின் இந்தக் கட்டுரை வேறு கட்டுரையுடன் இணைக்கப்படவோ, வழிமாற்றப்படவோ, நீக்கப்படவோ கூடும். |
தி. மு. அப்துல் காதர் | |
|---|---|
| தமிழ்த்துறைத் தலைவர், இசுலாமியா கல்லூரி | |
| பதவியில் 1991(?)–? | |
| முன்னையவர் | சை. அப்துல் ரகுமான் |
| பின்னவர் | ? |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 18 சூன் 1948 சின்னமனூர், பிரிக்கப்படாத மதுரை மாவட்டம், மதராசு மாகாணம், இந்திய மேலாட்சி (தற்போது தேனி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா) |
| குடியுரிமை | இந்தியர் |
| தேசியம் | தமிழர் |
| தொழில் | பேராசிரியர் (ஓய்வு), எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர் |
தி. மு. அப்துல் காதர் (பிறப்பு: 18 சூன் 1948) சின்னமனூர் எனுமிடத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஒரு இந்திய முஸ்லிம் எழுத்தாளர். வாணியம்பாடி இஸ்லாமிய கல்லுரியின் மேனாள் தமிழ்த்துறைத் தலைவருமாவார். இவர் ஒரு கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், கூடவே கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் மற்றும் வனொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகளவில் பங்களிப்பு செய்துள்ளவர். கடந்த சில வருடங்களாக ராஜ் தொலைக்காட்சியில் அகடவிகடம் எனும் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி அதனை நெறிப்படுத்தி நடத்தி வருகின்றார். தேசிய லீக் கட்சியின் மாநில பொது செயலாளர் பதவி வகித்து வருகிறார்.
எழுதி வெளியிட்டுள்ள நூல்கள்
[தொகு]- மின்னல் திரிகள்
- கரந்த வாசல்
- மீராவின் கனவுகள்
- கம்பனும் தமிழும்
உட்பட 15க்கும் மேற்பட்ட நூல்களை இவர் எழுதியுள்ளார்.
பெற்ற கௌரவங்கள்
[தொகு]- கவிமாமணி இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் பட்டம்
கலைமாமணி விருது
[தொகு]- தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையால் வழங்கப்பட்டு வரும் கலைமாமணி விருதுக்கு, இலக்கியப் பேச்சாளர் பிரிவில் 2022 ஆம் ஆண்டுக்கு இவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.[1]
உசாத்துணை
[தொகு]- இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011