திவ்வியசூரி சரிதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திவ்வியசூரி சரிதம் [1] என்பது வைணவ குருபரம்பரை வரலாறுகளைக் கூறும் நூல்களில் ஒன்று. 19 ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல். [2] ஆழ்வார்களைத் திவ்விய சூரிகள் என்பது வைணவ மரபு. வங்கிபுரம் சீனிவாசாசாரியார் இந்த நூலை இயற்றியவர். ஆழ்வார்களின் வரலாற்றுடன் நாதமுனிகள், ஆளவந்தார், எம்பெருமானார், வேதாந்த தேசிகர் வரலாறுகளும் இதில் உள்ளன. இந்த நூல் 2824 பாடல்களைக் கொண்டது. [3] இந்த நூல் முழுமை பெறவில்லை எனத் தெரிகிறது.

அடிக்குறிப்பு[தொகு]

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1975, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 299. 
  2. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1977, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. 
  3. பதிப்பு 1939
"https://ta.wikipedia.org/w/index.php?title=திவ்வியசூரி_சரிதம்&oldid=1442581" இலிருந்து மீள்விக்கப்பட்டது