புது தில்லி–சென்னை முதன்மை வழித்தடம்
தில்லி - சென்னை வழித்தடம் | |||
---|---|---|---|
கண்ணோட்டம் | |||
நிலை | இயக்கத்தில் | ||
உரிமையாளர் | இந்திய இரயில்வே | ||
வட்டாரம் | தில்லி, ஹரியானா, உத்திரப் பிரதேசம், இராச்சசுத்தான், மத்தியப் பிரதேசம், மகாராட்டிரம் தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் தமிழ்நாடு | ||
முனையங்கள் | |||
சேவை | |||
செய்குநர்(கள்) | வடக்கு ரயில்வே, வடக்கு மத்திய ரயில்வே, மத்திய ரயில்வே, தென்மத்திய ரயில்வே, தென்னக இரயில்வே | ||
வரலாறு | |||
திறக்கப்பட்டது | 1929 | ||
தொழில்நுட்பம் | |||
வழித்தட நீளம் | 2,182 km (1,356 mi) | ||
தட அளவி | 1,676 மிமீ (5 அடி 6 அங்) | ||
இயக்க வேகம் | 160 km/hr வரை | ||
|
தில்லி- சென்னை வழித்தடம் இந்தியாவின் கிழக்கு கடற்கரை சமவெளிகளின் தெற்குபகுதி , கிழக்குத் தொடர்ச்சி மலைகள் , தக்காண பீடபூமி மற்றும் யமுனா பள்ளத்தாக்குகள் வழியே தில்லியையும், சென்னையையும் இணைக்கும் ஒரு தொடருந்து பாதை ஆகும்
2,182 கிலோமீட்டர்கள் (1,356 mi) நீளம் கொண்ட இந்த வழித்தடம், தில்லி, ஹரியானா, உத்திரப்பிரதேசம், இராச்சசுத்தான், மத்தியப்பிரதேசம், மகாராட்டிரம், தெலுங்கானா, ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை இணைக்கிறது. இந்த வழித்தடத்தில் கிராண்ட் ட்ரங்க் விரைவுவண்டி இயங்குவதால், கிராண்ட் ட்ரங்க் வழித்தடம் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.
கிராண்ட் ட்ரங்க் வழித்தடமானது பிரிவு அ என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது, எனவே இதன் வழியே செல்லும் தொடருந்து 160கி.மீ வரை வேகமாக செல்லமுடியும்.[1]
வரலாறு
[தொகு]- 1904ல் ஆக்ரா-தில்லி நேர்ப்வழித்தடம் திறக்கப்பட்டது.[2] அவற்றுள் சில புதுதில்லியின் கட்டுமானத்தின்பொழுது சீரமைக்கப்படது(1927-28ல் திறக்கப்பட்டது).[3]
- 1881ல் குவாலியர் மன்னரால் ஆக்ரா - குவாலியர் பாதை திறந்து வைக்கப்பட்டது பின்னர் இது சிந்தியா மாநில இரயில்வே என்றழைக்கப்பட்டது.
- 1889ல் இந்திய உள்நாட்டு இரயில்வே நிறுவனம் குவாலியர் - ஜான்சி மற்றும் ஜான்சி - போபால் வழித்தடத்தினை நிர்மாணித்தனர்.[4]
- 1884ல் போபாலின் பேகம் என்பவரால் போபால் - இட்டார்சி வழித்தடம் திறந்து வைக்கப்பட்டது.[4] இட்டார்சி நாக்பூரோடு 1923-24ல் இணைக்கப்பட்டது.[5]
- 1899ல் விசயவாடா - சென்னை வழித்தடம் கட்டமைக்கப்பட்டது.[4]
- 1929ல் காசிபேத் - பாலர்சா இணைப்பின் மூலம் சென்னை தில்லியோடு நேரடியாக இணைக்கப்பட்டது.[2]
மின்சாரமயமாக்கம்
[தொகு]விசயவாடா சென்னை வழித்தடம் 1989ல் மின்சாரமயமாக்கப்படது.[6]
விசயவாடா - காசிபேத் பிரிவு 1985-88ல் மின்சாரமயமாக்கப்பட்டது.[7]
காசிபேத்-இராமகுண்டம்-பாலர்சா- நாக்பூர் பிரிவு 1987-89ல் மின்சாரமயமாக்கப்பட்டது.
1988-89ல் போபால் - இட்டார்சி பிரிவும், நாக்பூர் - இட்டார்சி பிரிவு 1990-91லும் மின்சாரமயமாக்கப்பட்டது.
1984-89ல் ஆக்ரா போபால் பிரிவு மின்சாரமயமாக்கப்பட்டது.
1982-85ல் ஆக்ரா - பரிதாபாத் பிரிவு மின்சாரமயமாக்கப்பட்டது.[7]
பயணிகள் நகர்வு
[தொகு]இந்திய இரயில்வேயின் முன்பதிவு தரவுவரிசையின் முதல் 100 இடத்திற்குலுள்ள புதுதில்லி, மதுரா சந்திப்பு, ஆக்ரா கன்டோட், குவாலியர், ஜான்சி, போபால், போபால் கபீப்கஞ்ச், நாக்பூர், வாரங்கல், விசயவாடா, நெல்லூர் மற்றும் சென்னை சென்ட்ரல் ஆகிய தொடருந்து நிலையங்கள் இந்த வழித்தடத்தில் அமைந்துள்ளது.[8]
சான்றுகள்
[தொகு]- ↑ "Chapter II – The Maintenance of Permanent Way". Retrieved 17 March 2014.
- ↑ 2.0 2.1 "IR History: Part III (1900-1947)". IRFCA. Retrieved 17 March 2014.
- ↑ "A fine balance of luxury and care". Hindusthan Times, 21 July 2011. Archived from the original on 2 சூன் 2013. Retrieved 17 மார்ச் 2014.
- ↑ 4.0 4.1 4.2 "IR History: Early Days – II". Chronology of railways in India, Part 2 (1870-1899). Retrieved 17 March 2014.
- ↑ "Introduction". Nagpur Itarsi Route. Nagpur district authorities. Archived from the original on 10 ஏப்ரல் 2009. Retrieved 17 March 2014.
- ↑ "IR History Part VII (2000-present)". IRFCA. Retrieved 17 March 2014.
- ↑ 7.0 7.1 "History of Electrification". IRFCA. Retrieved 17 March 2014.
- ↑ "Indian Railways Passenger Reservation Enquiry". Availability in trains for Top 100 Booking Stations of Indian Railways. IRFCA. Archived from the original on 10 May 2014. Retrieved 17 March 2014.