திருவுந்தியார் (திருவியலூர் உய்யவந்ததேவ நாயனார்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவுந்தியார் சைவசித்தாந்த நூல்களுள் ஒன்று;[1] இந்நூல்களுள் தலை சிறந்த சிவஞானபோதத்துக்கு முற்பட்டது. இதனை கீழ்காணும் வெண்பா மூலம் அறியமுடிகிறது.

"உந்திகளிறு வுயர்போதம் சித்தியார்

பிந்திருபா உண்மைபிரகாசம் - வந்த அருட்

பண்புவினா போற்றி கொடிபாசமிலா நெஞ்சுவிடு

உண்மைநெறி சங்கற்பமுற்று"

திருவியலூர் உய்யவந்ததேவ நாயனார் இந் நூலை இயற்றினார். 45 பாடல்களில், பதி [2], பசு [3], பாசம் [4] என்பவற்றின் இயல்புகளைப் பற்றியும், உயிர்கள் இறைவனுடன் சேருவதற்கான வழிகளைப் பற்றியும் எடுத்தியம்புகிறது. இதற்கு 16 ஆம் நூற்றாண்டில் தோன்றிய உரை ஒன்று உண்டு.

திருவுந்தியார் = திரு + உந்தி + ஆர் என மூன்றாக பகுக்கலாம். திரு = அருட்சத்தி , உந்தி = பறத்தல், ஆர் = மரியாதை பன்மை விகுதி.

பாடல் - எடுத்துக்காட்டு[தொகு]

1

அகளமா யாரு மறிவரி தப்பொருள்
சகளமாய் வந்ததென் றுந்தீபற
தானாகத் தந்ததென் றுந்தீபற.

இதன் சொற்பிரிப்புப் பதிவு

அகளமாய் [5] ஆரும் அறிவு அரிது அப்பொருள்
சகளமாய் [6] வந்தது என்று உந்தீ பற
தானாகத் தந்தது என்று உந்தீ பற.

2

பெற்ற சிற்றின்பமே பேரின்பமாம் ஆங்கே
முற்ற வரும் பரிசு உந்தீ பற
முளையாது மாயை என்று உந்தீ பற [7]

இதன் பொருள்

இறைவனை நினைத்துப் பெறும் சிற்றின்பமே பேரின்பம். இதுவே முற்றிய பரிசு. - என்று எண்ணிக்கொண்டு உந்தீ பற - இது ஒருவர் கூற்று.
இப்படி நினைத்தால் மனத்தில் மாயை பிறக்காது - இதனைப் புரிந்துகொண்டு உந்தீ பற - இது முதலில் சொல்லியவரை வழிமொழியும் கூற்று.[8]

உசாத்துணைகள்[தொகு]

  • இராசமாணிக்கனார். மா., சைவசமய வளர்ச்சி, பூங்கொடி பதிப்பகம், மயிலாப்பூர், சென்னை, மூன்றாம் பதிப்பு: டிசம்பர் 1999 (முதற்பதிப்பு: 1958)
  • உய்யவந்ததேவ நாயனார், திருவுந்தியார் பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம், மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]