திருவிடைமருதூர் மும்மணிக்கோவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவிடைமருதூர் மும்மணிக்கோவை [1] என்னும் சைவ நூல் பதினோராம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. மும்மணிக்கோவை என்பது ஒரு சிற்றிலக்கியம் இதன் ஆசிரியர் பட்டணத்துப் பிள்ளையார். சென்னையிலுள்ள திருவொற்றியூர் பகுதியில் வாழ்ந்தவர். காலம் பத்தாம் நூற்றாண்டு.

திருவிடைமருதூர்க் கோயிலிலுள்ள சிவபெருமானை இந்த நூல் போற்றிப் பாடுகிறது.

நூல் அமைதி[தொகு]

இந்த ஆசிரியர் இயற்றிய திருக்கழுமல மும்மணிக்கோவையிலுள்ள ஆசிரியப்பாக்கள் இணைகுறள் ஆசியப்பாக்களாக உள்ளன. இந்த நூல் நேரிசை ஆசிரியப்பாக்களைக் கொண்டுள்ளது.

வெண்பா (5)
கண்ணென்றும் நந்தமர்க்கோர் காப்பென்றும் கற்றிருக்கும்
எண்ணென்றும் மூல எழுத்தென்றும் – ஒண்ணை
மருதவப்பா என்றுமுனை வாழ்த்தாரேல் மற்றும்
கருதவப்பால் உண்டோ கதி.[2]
கட்டளைக்கலித்துறை (9)
வந்திக்கண் டாய்அடி யாரைக்கண் டான்மற வாதுநெஞ்சே
சிந்திக்கண் டாய்அரன் செம்பொன் கழல்திரு மாமருந்தைச்
சந்திக்கண் டாயில்லை யாயின் நமன்தமர் தாம்கொடுபோய்
உந்திக்கண் டாய்நிர யத்துன்னை வீழ்த்தி உழக்குவரே.
புதுமையான சொல்-தொடர்கள்
வந்திக்கண்டாய், சிந்திக்கண்டாய், சந்திக்கண்டாய், உந்திக்கண்டாய் என்னும் புதுமையான தொடர்கள் இவரது நூலில் காணப்படுகின்றன. அவை முறையே வந்திப்பாயாக (வாழ்த்துவாயாக), சிந்திப்பாயாக, சந்திப்பாயாக, உந்திப்பாயாக (துள்ளிக் குதித்துச் செல்வாயாக) என்னும் பொருள் தருபவை.

காலம் கணித்த கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005

அடிக்குறிப்பு[தொகு]

  1. திருவிடைமருதூர் மும்மணிக்கோவை (பாடல் மூலம்)
  2. கண் அவன். காப்பு அவன். எண்ணம் அவன். மூல எழுத்து அவன். அவன் மருத மரத்தடி அப்பன். அவனே கதி என வாழ்த்துவோம்.