திருவல்லவாழ் ஸ்ரீவல்லப கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற
திருவல்லவாழ் (ஸ்ரீவல்லப கோயில்)
புவியியல் ஆள்கூற்று:9°22′25″N 76°33′45″E / 9.373740°N 76.562393°E / 9.373740; 76.562393
பெயர்
புராண பெயர்(கள்):ஸ்ரீவல்லப மகாஷேத்திரம்
பெயர்:திருவல்லவாழ் (ஸ்ரீவல்லப கோயில்)
வரிவடிவம்:ശ്രീവല്ലഭ മഹാക്ഷേത്രം
அமைவிடம்
ஊர்:திருவல்லா
மாவட்டம்:பத்தனம்திட்டா
மாநிலம்:கேரளம்
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:திருவாழ்மார்பன், ஸ்ரீவல்லபன், கோலப்பிரான்
தாயார்:செல்வத் திருக்கொழுந்துநாச்சியார், வாத்சல்ய தேவி
தீர்த்தம்:கண்டகர்ண தீர்த்தம், பம்பை தீர்த்தம்
மங்களாசாசனம்
பாடல் வகை:நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
மங்களாசாசனம் செய்தவர்கள்:நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார்
கட்டிடக்கலையும் பண்பாடும்
விமானம்:சதுரங்க கோல விமானம்
வரலாறு
வலைதளம்:www.srivallabhatemple.org

திருவல்லவாழ் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது திருவல்லா, ஸ்ரீவல்லப ஷேத்ரம் எனவும் அழைக்கப்படுகின்றது.[1] கருடபுராணம், மத்ஸ்யபுராணம் போன்றவற்றில் இத்தலத்தைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இறைவர் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் திருவாழ்மார்பன், ஸ்ரீவல்லபன், கோலப்பிரான் என அழைக்கப்படுகிறார்.[2] இறைவி செல்வத் திருக்கொழுந்துநாச்சியார், வாத்சல்ய தேவி என அழைக்கப்படுகிறார். இத்தல தீர்த்தம் கண்டகர்ண தீர்த்தம், பம்பை தீர்த்தம் ஆகியனவாகும். இதன் விமானம் சதுரங்க கோல விமானம் எனும் அமைப்பைச் சேர்ந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. ஆ.எதிராஜன் B.A.,. 108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு. தமிழ் இணையப் பல்கலைக் கழகம். 
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-01-21. பார்க்கப்பட்ட நாள் 2013-05-21.