திருவரம்பு
Thiruvarambu KURUVICAUDU | |
---|---|
town | |
Thirparappu waterfalls | |
Country | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கன்னியாகுமரி |
Languages | |
நேர வலயம் | இ.சீ.நே. (ஒசநே+5:30) |
பின்கோடு | 629161 |
வாகனப் பதிவு | TN 75 |
Nearest city | Nagercoil |
திருவரம்பு(Thiruvarambu) நகரம் திருவட்டாறு நகர பஞ்சாயத்து நகரில் ஒன்றாகும். இந்த நகரத்தில் பல மத சபைகளும் கோயில்களும் உள்ளன. இந்த கிராமத்தில் மிகவும் நல்ல சுகாதார வசதிகள் உள்ளன, திருப்திகரமான வாழ்க்கைக்கு சிறந்த மற்றும் நல்ல இயற்கைச் சூழலுடன் இப்பகுதி திகழ்கிறது. திற்பரப்பு நீர்வீழ்ச்சி திருவரம்பிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த கிராமத்திற்கு பேச்சிப்பாறை, பெரிஞ்சாணி,கோதையாறு(அணை) போன்ற அணைகளில் இருந்து பல ஓடைகள் ,கால்வைகள் மற்றும் கோதையாறு வாயிலாக தண்ணீர் வழங்கப்படுகின்றன. தென்னை, வாழை, ரப்பர், மரவள்ளிக்கிழங்கு,மிளகு மற்றும் இதர பருப்பு வகைகள் இங்கு நன்கு விளைகின்றன.
அமைவிடம்[தொகு][தொகு]
திருவரம்புக்கு கிழக்கில் குலசேகரம் 5 கிமீ; மேற்கில் மார்த்தாண்டம் 10 கிமீ; வடக்கில் திற்பரப்பு 3 கிமீ; தெற்கில் தக்கலை 20 கிமீ தொலைவில் உள்ளது. அருகமைந்த தொடருந்து நிலையம், 15 கிமீ தொலைவில் உள்ள குழித்துறையில் உள்ளது.
நிர்வாகம்[தொகு][தொகு]
திருவரம்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவட்டாறு நகர பஞ்சாயத்துக்கு உட்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளின் வளர்ச்சிக்கு பொறுப்பாளிகள். வடிகால் வசதி, உள்ளூர் சாலைகள் மற்றும் நீர் வசதி ஆகியவற்றை பராமரிக்கின்றனா்.