உள்ளடக்கத்துக்குச் செல்

திருவரம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருவரம்பு
நகரம்
திற்பரப்பு அருவி
திற்பரப்பு அருவி
Country இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கன்னியாகுமரி
மொழிகள்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
பின்கோடு
629161
வாகனப் பதிவுTN 75

திருவரம்பு (Thiruvarambu) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஓர் ஊராகும். குலசேகரத்திலிருந்து அருமனை செல்லும் சாலையில் திருவரம்பு நகரம் உள்ளது.[1][2]திருவட்டாறு நகர பஞ்சாயத்தில் இடம்பெற்றுள்ள நகரில் ஒன்றாகும். இந்த நகரத்தில் பல மத சபைகளும் கோயில்களும் உள்ளன. திற்பரப்பு அருவியிலிருந்து திருவரம்பு 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த கிராமத்திற்கு பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, கோதையாறு போன்ற அணைகளிலிருந்து பல ஓடைகள், கால்வாய்கள் மூலம் தண்ணீர் வழங்கப்படுகின்றன. தென்னை, வாழை, ரப்பர், மரவள்ளிக்கிழங்கு, மிளகு மற்றும் இதர பருப்பு வகைகள் இங்கு விளைகின்றன.

அமைவிடம்

[தொகு]

5 கி.மீ. தொலைவில் கிழக்கில் குலசேகரம், 10 கி.மீ. தொலைவில் மேற்கில் மார்த்தாண்டம், வடக்கில் 3 கிலோ மீட்டர் தொலைவில் திற்பரப்பு அருவி, தெற்கில் 20 கிலோ மீட்டர் தொலைவில் தக்கலை ஆகிய பகுதிகள் திருவரம்புக்கு அருகில் அமைந்துள்ளன. 15 கி.மீ. தொலைவில் குழித்துறை உள்ளது.

நிர்வாகம்

[தொகு]

திருவரம்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவட்டாறு நகர பஞ்சாயத்துக்கு உட்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் வடிகால் வசதி, உள்ளூர் சாலைகள் மற்றும் நீர் வசதி ஆகியவற்றை பராமரிக்கின்றனா்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவரம்பு&oldid=4091226" இலிருந்து மீள்விக்கப்பட்டது