திருவரங்கம் தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவரங்கம் தீவு (Srirangam Island) என்பது ஓர் ஆற்றுத் தீவு ஆகும் இது தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாநகரை ஒட்டிய ஒரு பகுதியாக உள்ளது. இது காவிரி ஆறு அதன் கிளை ஆறான கொள்ளிடம் ஆறு ஆகியவற்றால் உருவான தீவு ஆகும்.  தீவின் நீளம் 19 மைல் (31 கி.மீ.) அகலம் 1.5 மைல்கள் (2.4 கி.மீ.) கொண்டதாக உள்ளது. தீவின் எல்லைகளாக மேற்கில்  மேலணையும், கிழக்கே கல்லணையும் உள்ளன. திருவரங்கம் நகரம், ஒரு முக்கிய இந்து வைணவ யாத்திரைத் தலமாக, இந்தத் தீவின் மையத்தில் அமைந்துள்ளது.

தீவின் பெரும் பகுதி திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் எல்லைக்குட்பட்டதாகவும், திருவரங்கம் மண்டலத்தின் ஒரு பகுதியாகவும், திருவரங்கம், திருவானைக்காவல், சீனிவாச நகர், கீதாபுரம், மேலூர், திருவளர்சோலை ஆகிய புறநகர் பகுதிகள் அடங்கியுள்ள பகுதியாகவும் உள்ளது.

மேற்கோள்கள் [தொகு]

W. Francis (1906). Gazetteer of South India. பக். 199. 

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவரங்கம்_தீவு&oldid=3726866" இலிருந்து மீள்விக்கப்பட்டது