உள்ளடக்கத்துக்குச் செல்

திருவனந்தபுரம் தொடருந்து கோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருவனந்தபுரம் இரயில்வே கோட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
திருவனந்தபுரம் இரயில்வே கோட்டம்
கண்ணோட்டம்
தலைமையகம்திருவனந்தபுரம், கேரளா, இந்தியா
வட்டாரம்கேரளா,தமிழ்நாடு
செயல்பாட்டின் தேதிகள்2 அக்டோபர் 1979; 46 ஆண்டுகள் முன்னர் (1979-10-02)–தற்போது வரை
முந்தியவைதென் இந்திய ரயில்வே கம்பெனி
Other
இணையதளம்www.sr.indianrailways.gov.in

திருவனந்தபுரம் இரயில்வே கோட்டம் என்பது இந்தியாவின் தென்னக இரயில்வேயின் கீழுள்ள ஆறு கோட்டங்களில் ஒன்றாகும். இதனுடைய தலைமையகம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது.

வரலாறு

[தொகு]

திருவனந்தபுரம் இரயில்வே கோட்டமானது, ஒலவக்காடு கோட்டத்திலிருந்து ஷொறணூர், கொச்சின் துறைமுகம் பிரிவு மற்றும் மதுரை கோட்டத்திலிருந்து எர்ணாகுளம்-திருவனந்தபுரம்-கன்னியாகுமரி பிரிவு ஆகியவை பிரிக்கப்பட்டு 1979-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் நாள் உருவாக்கப்பட்டது. இக்கோட்டத்தின் காயங்குளம்-கொல்லம் வழித்தடமானது 1996-ம் ஆண்டு இருவழித்தடமாக்கப்பட்டது. இக்கோட்டத்தின் கொல்லம்-திருவனந்தபுரம் வழித்தடம் 2000-ம் ஆண்டு இருவழித்தடமாக்கப்பட்டது. இக்கோட்டத்தின் எர்ணாகுளம்-திருவனந்தபுரம் வழித்தடமானது 2006-ம் ஆண்டு மின்மயமாக்கப்பட்டது.[1]

தொடருந்து நிலையங்களின் போக்குவரத்து மற்றும் பயணிகள் வருவாய் விவரங்கள்

[தொகு]
தரவரிசை தொடருந்து நிலையம் மாவட்டம் பகுதிகள் மொத்த பயணிகள்
(2018–19)
பயணச்சீட்டு வருவாய்
(2018–19)
1 திருவனந்தபுரம் திருவனந்தபுரம் கேரளம் 1,42,92,407 ₹1,93,14,10,719
2 எர்ணாகுளம் சந்திப்பு எர்ணாகுளம் கேரளம் 93,39,152 ₹1,53,68,38,174
3 திருச்சூர் சந்திப்பு திருச்சூர் கேரளம் 67,81,646 ₹1,08,50,11,153
4 எர்ணாகுளம் நகரம் எர்ணாகுளம் கேரளம் 43,47,498 ₹66,70,06,491
5 கொல்லம் சந்திப்பு கொல்லம் கேரளம் 84,99,151 ₹67,45,38,284
6 ஆலுவா எர்ணாகுளம் கேரளம் 42,20,114 ₹63,55,44,911
7 கோட்டயம் கோட்டயம் கேரளம் 44,96,3200 ₹57,22,27,243
8 நாகர்கோவில் சந்திப்பு கன்னியாகுமரி தமிழ்நாடு 26,92,661 ₹50,68,49,949
9 வர்க்கலா திருவனந்தபுரம் கேரளம் 25,58,898 ₹46,51,06,837
10 கன்னியாகுமரி கன்னியாகுமரி தமிழ்நாடு 31,24,766 ₹35,49,84,400[2][3]

திட்டங்கள் மற்றும் மேம்பாடு

[தொகு]

இரட்டைப் பாதை

[தொகு]
  • 26 ஜீலை 2025 அன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோதி, சென்னை-கன்னியாகுமரி வழித்தடத்தின் எஞ்சிய ஆரல்வாய்மொழி - நாகர்கோவில் சந்திப்பு (12.87 கிலோ மீட்டர்), திருநெல்வேலி-மேலப்பாளையம் (3.6 கிலோ மீட்டர்) பிரிவுகளின் இரட்டை ரயில் பாதைத் திட்டம், ₹650 கோடி மதிப்பினில் திருவனந்தபுரம்-கன்னியாகுமரி தொடருந்து பிரிவின் ஒரு பகுதியாக இருக்கும் 21 கிலோ மீட்டர் தூர நாகர்கோவில் டவுன்-கன்னியாகுமரி பிரிவின் இரட்டைப்பாதையை நாட்டிற்கு அர்பணித்தார்.[4]

சென்னை - குமரி, தமிழ்நாட்டுக்கும் கேரளாவிற்கும் இடையிலான போக்குவரத்து இணைப்புகளை வலுப்படுத்தும். கூடுதலாக, பயண நேரத்தைக் குறைக்கும். மேலும் பயணிகள் போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து ஆகியவற்றில் திறனை மேம்படுத்துவதன் மூலம் பிராந்தியப் பொருளாதாரத்தையும் வலுப்படுத்தும்.

அமிர்த பாரத் நிலைய மேம்பாடு திட்டங்கள்

[தொகு]

அமிர்த பாரத் நிலைய திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 1275 நிலையங்களுள் திருவனந்தபுரம் கோட்டத்தில் பின்வரும் தமிழ்நாட்டு நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.[5]


மேலும் பார்க்க

[தொகு]

மதுரை தொடருந்து கோட்டம்

மேற்கோள்கள்

[தொகு]