திருவண்ணாமலையார் வண்ணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவண்ணாமலையார் வண்ணம் என்னும் நூல் கவிராச பிள்ளை என்பவரால் 16 ஆம் நூற்றாண்டு எழுதப்பட்டது. இது வண்ணம் (பாநடை வகை) சந்த நடையில் அமைந்த வண்ண நூல்களின் முன்னோடி. திருவண்ணாமலை ஊரிலுள்ள இறைவன் மீது பாடப்பட்டது. [1]

பாடல்[தொகு]

இந்த நூலில் வரும் வண்ணப்பாடலின் ஒரு பகுதி (எடுத்துக்காட்டு)
(சந்தம் காட்டும் வகையில் பாடல் பிரிப்பு செய்யப்பட்டுள்ளது)

மலர்த்தானை வனசமலர் தனைப்போல எழுதிடினும்
மலர்ப்பாய வனமென நடந்து வருமோ

உறுப்பான திலகநுதல் இதுப்போல எழுதிடினும்

உவப்பான குறுவியர் விரும்பி வருமோ
மணிக்கோல மிடறுகமு கினைப்போல எழுதிடினும்
மரப்பாவை உருகுமிசை இன்பம் வருமோ
விரப்பெழுத் தின்வீணை பேச வருமோ

அடிக்குறிப்பு[தொகு]

  1. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம், பதிப்பு 2005