திருலோகி சீராப்தி சயனநாராயணப் பெருமாள் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருலோகி சீராப்தி சயனநாராயணப் பெருமாள் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அமைந்துள்ள வைணவக்கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் கும்பகோணம் அருகில் திருப்பனந்தாளுக்குக் கிழக்கே 5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. [1]

இறைவன், இறைவி[தொகு]

இக்கோயிலில் உள்ள மூலவர் சீராப்தி சயனநாராயணப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். தாயார் சீரநாயகி ஆவார். மூலவர் தென்புறம் முடியையும் வட புறம் ஐந்து தலைகள் கொண்ட ஆதிசேசன் மீது சயனித்த கோலத்தில் உள்ளார். தாயார் சனி சன்னதியில் உள்ளார். [1]

பிற சன்னதிகள்[தொகு]

வரதராஜப் பெருமாள், யோக நரசிம்மர், விஷ்ணு துர்க்கை ஆகியோருக்கான சன்னதிகள் இக்கோயிலில் உள்ளன. 108 திவ்யதேசங்களில் ஒன்றான திருவெள்ளியங்குடியின் அபிமானத் தலமாக இத்தலம் உள்ளது. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 திருக்கோயில்கள் வழிகாட்டி, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014