திருமலைராயன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருமலைராயன் என்பவன் ஒரு வள்ளல். அரசன். சாளுக்கிய சோழர் மரபில் வந்தவன். காளமேகப் புலவரைப் போற்றிப் பாதுகாத்தவன். காலம் 15 ஆம் நூற்றாண்டு. [1] காளமேகப் புலவரின் பாடலொன்றில் இது கூறப்படிவதைக் காணலாம்.

பெரியவிட மேசேரும் பித்தர் முடியேறும்
அரியுண்ணும் உப்புமேல் ஆடும் – எரிகுணமாம்
தேம்பொழியும் சோலைத் திருமலைரா யன்வரையில்
பாம்புமெலு மிச்சம் பழம்.

அடிக்குறிப்பு[தொகு]

  1. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, பக்கம் 55, 2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமலைராயன்&oldid=1168638" இலிருந்து மீள்விக்கப்பட்டது