திருமறைக் கலா மன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருமறைக் கலாமன்றம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திருமறைக் கலா மன்றம் யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஒரு கலை அமைப்பு. இம்மன்றம் 1965 ஆம் ஆண்டளவில் ஆரம்பிக்கப்பட்டது.[1]

1965 ஆம் ஆண்டு உரும்பிராயில் நீ. மரிய சேவியர் அடிகள் பணி செய்த காலத்தில் 'திருமறைக்கலாமன்றம்' எனும் பெயருடன் இவ் அரங்க இயக்கம் செயற்படத் தொடங்கியது. உரும்பிராய், சுன்னாகம், மல்லாகம் என ஒன்றிணைந்த கலைஞர்களைக் கொண்டு மரிய சேவியர் அடிகள் திருப்பாடல்களின் நாடகங்களை மட்டுமன்றி பல்வேறு விவலிய நாடகங்கள், இலங்கை வானொலிக்கான நாடகங்கள், கூத்துக்கள் எனப் பலவற்றையும் தயாரித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "நேர்காணல் – யாழ்ப்பாணம் திருமறை கலா மன்றம்". வத்திக்கான் வானொலி. 26-07-2012. பார்க்கப்பட்ட நாள் 19 டிசம்பர் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமறைக்_கலா_மன்றம்&oldid=3128324" இலிருந்து மீள்விக்கப்பட்டது