திருப்பதி மாநகராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருப்பதி மாநகராட்சி
வகை
வகை
தலைமை
மாநகரத் தந்தை
மருத்துவர் பி.ஆர். சைரீசா யாதவ், (ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி)
மாநகர துணைத் தந்தை
மாநகர ஆணையர்
பி. எஸ். கிரிசா இ. ஆ. ப.
கட்டமைப்பு
அரசியல் குழுக்கள்
Government (48)

Opposition (1)

  •      TDP (1)
தேர்தல்கள்
அண்மைய தேர்தல்
|10 மார்ச் 2021
வலைத்தளம்
TMC website

திருப்பதி மாநகராட்சி (Tirupati Municipal Corporation) என்பது இந்திய மாநிலமான ஆந்திராவின் திருப்பதி நகரத்தை நிர்வகிக்கும் குடிமை அமைப்பாகும்.[1] ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்படும் மாநில மாநகரங்களான காக்கிநாடா மற்றும் விசாகப்பட்டினத்துடன் இணைந்து மூன்றாவது மாநகராகத் திருப்பதியும் உள்ளது.[2]

காலவரிசை[தொகு]

திருப்பதி நகராட்சியாக 1886 ஏப்ரல் 1 அன்று உருவாக்கப்பட்டது. நகராட்சி பல ஆண்டுகளாகப் பல தரங்களைக் கண்டது மற்றும் மார்ச் 2, 2007 அன்று மாநகர் நிறுவனமாக உருவாக்கப்பட்டது. இதனைக் கீழ்வரும் அட்டவணையில் காணலாம்:[1][3]

நகராட்சி வகை மேம்படுத்தப்பட்டது
நகராட்சி 1 ஏப்ரல் 1886
முதல் தரம் 12 ஜனவரி 1965
இரண்டாம் வகுப்பு 1 அக்டோபர் 1962
சிறப்பு தரம் 13 பிப்ரவரி 1970
தேர்வு தரம் 7 அக்டோபர் 1998
மாநகராட்சி 2 மார்ச் 2007

குடிமை நிர்வாகம்[தொகு]

திருப்பதி மாநகராட்சியின் பரப்பளவு சுமார்16.59 km2 (6.41 sq mi) ஆகும். இது விரிவாக்கத்திற்குப் பிறகு தற்போதைய சூழலில் 27.44 km2 (10.59 sq mi) உள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி திருப்பதியின் மக்கள் தொகை 374,260 ஆகும். மாநகரின் தற்போதைய ஆணையாளர் பி. எஸ். கிரிசா இ. ஆ. ப. ஆவார்.[4]

மேற்கோள்கள்[தொகு]