திருத்தந்தையின் ஆணை ஓலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருத்தந்தை எட்டாம் அர்பன் 1637இல் வெளியிட்ட ஆணை ஓலை
திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் 2011இல் வெளியிட்ட ஆணை ஓலை

திருத்தந்தையின் ஆணை ஓலை (ஆங்கில மொழி: Papal bull) என்பது கத்தோலிக்க திருத்தந்தையால் வெளியிட்டப்படும் சட்ட ஆணையாகும். இவ்வகை ஆணைகள் 6ம் நூற்றாண்டு முதலே பழக்கத்தில் இருந்தாலும், 13ம் நூற்றாண்டிலேயே அதிகம் பயன்படுத்தப்பட்டது. 15ம் நூற்றாண்டில் திருத்தூதரக அலுவலகம் (Apostolic Chancery), ஆணை ஓலைகளின் பதிவகம் ("register of bulls"/registrum bullarum) எனப்பெயர் மாற்றப்பட்ட போது இவை அதிகாரப்பூர்வமானது.[1] இவ்வகை ஆணைஓலைகளின் தொடக்கத்தில் திருத்தந்தை தம் பெயருக்கு அடுத்து ஆயர், இறை அடியாருக்கு அடியார் என எழுதுவார் என்பது குறிக்கத்தக்கது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Thurston, Herbert. "Bulls and Briefs." The Catholic Encyclopedia. Vol. 3. New York: Robert Appleton Company, 1908. 23 Jul. 2014
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருத்தந்தையின்_ஆணை_ஓலை&oldid=1837676" இலிருந்து மீள்விக்கப்பட்டது