திருச்செங்காட்டங்குடிப் புராணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருச்செங்காட்டங்குடி என்னும் ஊரில் குடிகொண்டுள்ள சிவபெருமான் மீது பாடப்பட்ட புராணம் திருச்செங்காட்டங்குடிப் புராணம். [1] இது 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவ எல்லப்ப நாவலர் பாடிய 6 புராண நூல்களில் ஒன்று. 392 பாடல்களைப் கொண்ட இந்த நூல் 11 சருக்கங்களாகப் பாகுபடுத்தப்பட்டுள்ளது. செங்காட்டங்குடி சிறுத்தொண்டர் வாழ்ந்த ஊர்.

நூலில் உள்ள பாடல் - எடுத்துக்காட்டு [2]

1

மந்திரப்புரி செங்காடு சத்தியபுரி மலரோன்
தந்திரப்புரி ஆத்தியின் வனம் தட மதம் கார்
முத்து பாற்காபுரி சமுத்திரபுரி முடி சேயர்
இந்திரன் மகிழ் கணபதீச்சரம் பேர் என்பாம்

2

வாள் அற்றனர் அயில் அற்றனர் சிலை அற்றனர் வாகைத்
தோள் அற்றனர் மார்பு அற்றனர் தொடை அற்றனர் போரின்
கோள் அற்றனர் குடல் அற்றனர் இடை அற்றனர் கோடாத்
தாள் அற்றனர்கை அற்றனர் மறுகண் வய வீரர்

அடிக்குறிப்பு[தொகு]

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1972, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. 
  2. பொருள்நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது