திருக்குறளுக்குப் புகழாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருக்குறள் பிற தமிழ் இலக்கியப் படைப்புகளில் பல முறை குறிப்பிடப்பட்டுள்ளது மற்றும் புகழப்பட்டுள்ளது. திருவள்ளுவ மாலை போன்ற நூல்கள் திருக்குறளைப் புகழ்வதற்கெனப் பாடப்பட்டுள்ளன. இக்கட்டுரையில் திருக்குறள் பற்றி பிற தமிழ் இலக்கியங்களில் காணப்படும் புக்ழ்ச்சி குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.

சங்க நூல்களில் புகழாரம்[தொகு]

ஆலத்தூர் கிழார்[தொகு]

'நிலம் புடைப் பெயர்வது ஆயினும் ஒருவன் செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் என அறம் பாடின்று' என்னும் பாடல் அடிகள் (புறம் 34) 'எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம், உய்வு இல்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு' என்னும் திருக்குறள் பாடலைப் பதிவு செய்கின்றன. 'அறம்' என்று புறநானூறு குறிப்பிடுவது வாழ்க்கையின் அறநெறி காட்டும் திருக்குறளைத்தான் என்பது தெளிவு.

மணிமேகலை நூல்[தொகு]

தெய்வம் தொழாஅள் கொழுநற் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் பெருமழை என்ற பொய்யிற் புலவன் பொருளுரை தேறாய் (22-61)

சங்கநூல்களில் திருக்குறள் நினைவோட்டம்[தொகு]

'பெரியோர் நாடி நட்பின் அல்லது, நட்டு நாடார் ஒட்டியோர் திறத்தே' (நற்றிணை 32) என வரும் கபிலரின் பாடல் அடிகளில் 'நாடாது நட்டலிற் கேடு இல்லை' (குறள் 791) என்னும் நினைவு பாய்கிறது.

திருவள்ளுவ மாலையில் புகழாரம்[தொகு]

வள்ளுவர் கடவுள் எனல்[தொகு]

28 காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணனார் \ பிரமன் வள்ளுவனாக வந்து 133 அதிகாரம் தந்தான்.
4 உக்கிரப் பொருவழுதியார் \ நான்முகன் திருவள்ளுவனாக மாறித் தன் நான்மறையை முப்பொருளாய்ச் சொன்னான்.
21 நல்கூர் வேள்வியார் \ வடமதுரைக்கு அச்சு நப்பின்னையை மணந்த கண்ணன். தென்மதுரைக்கு அச்சு சிவபெருமான் போன்ற, ஆனால் தொண்டையில் மறு இல்லாத செந்நாப்போதார்.

வள்ளுவர் கடவுளின் மேலானவர் எனல்[தொகு]

6 பரணர் \ திருமால் தன் இரண்டு தப்படிகளால் மூவுலகப் பரப்பைதான் அளந்தான். திருவள்ளுவரோ தன் பாவடிகள் இரண்டால் உலகத்தார் உள்ளத்தையெல்லாம் அளந்தார். \ வேற்றுமை அணி \
14 பொன்முடியார் \ அன்று குறள் உருவம் (திர்ருமால்) காசிபன் (வாமணன்) என்னும் பெயரோடு உலகை அளந்ததாம். இன்று குறள் பாடல் உலகை அளக்கிறது.
39 உறையூர் முதுகூத்தனார் \ திருவள்ளுவர் தேவரினும் சிறந்தவர். நாவுக்கு நல்வாழ்வு திருக்குறள்.
8 மாமூலனார் \ வள்ளுவர் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருள் சொன்ன தேவர். அவரை வள்ளுவன் குடியில் பிறந்தவன் என்பவன் ஒன்றும் அறியாத முட்டாள்.
53 ஆலங்குடி வங்கனார் \ அமுதம் சுவைத்தவர் தேவர் மட்டுமே. திருக்குறளை மக்களும் சுவைக்கின்றனர். எனவை திருக்குறள் அமிழ்தத்தினும் சிறந்தது.

திருக்குறள் வேதம் எனல்[தொகு]

32 பெருஞ்சித்திரனார் \ வேதம் தன்னைத் தானே திருக்குறளாகப் பிறப்பித்துக்கொண்டது.
43 வண்ணக்கஞ் சாத்தனார் \ ஆரியத்தில் வேதம் இருக்கிறது. தமிழில் திருக்குறள் இருக்கிறது. எனவே இரண்டும் சமம்.
15 கோதமனார் \ ஏட்டில் எழுதினால் நான்மறையின் ஆற்றல் போய்விடும் என்று எழுதாமல் விட்டுவிட்டனர். திருக்குறள் ஏட்டில் எழுதியபின் ஆற்றல் கூடுகிறது.
24 மாங்குடி மருதனார் \ வேதப்பொருளாக விளங்கும் திருக்குறள் ஓதுவதற்கு எளிது, உணர்வதற்கு அரிது, உள்ளுந்தோறும் உள்ளுந்தோறும் உள்ளம் உருக்கும்.
30 பாரதம் பாடிய பெருந்தேவனார் \ பாரதமும், இராம கதையும் திருக்குறளுக்கு இணை.

இயற்கையோடு ஒப்பிட்டு மேன்மை கூறல்[தொகு]

52 மதுரைப் பாலாசிரியனார் \ வெள்ளி, வியாழம், ஞாயிறு, திங்கள் ஆகியவை புறவிருள் போக்கும். திருக்குறள் அகவிருள் போக்கும்.
46 அக்காரக் கனி நச்சுமனார் \ கலை நிரம்பல், இனிதாதல், நீர்மைத்து ஆதல் ஆகியவற்றால் திங்களும், திருக்குறளும் சமம் என்றாலும் திருக்குறளீன் நயம் திங்களுக்கு இல்லை. வேற்றுமை அணி
47 நப்பாலத்தனார் \ திருக்குறள் அக இருள் நீக்கும் விளக்கு. அறம் - அகல். பொருள் - திரி. இன்பம் - நெய். செஞ்சொல் - தீ. குறட்பா - விளக்குத் தண்டு. உருவக அணி
48 குலபதி நாயனார் \ ஞாயிறு கமலம் மலர்த்தும். திருக்குறள் உள்ளக் கமலம் மலர்த்தும். ஞாயிறு புறத்திருள் போக்கும். திருக்குறள் அகத்திருள் போக்கும். இரண்டும் ஒப்பு எனினும் திருக்குறள் உயர்ந்தது. வேற்றுமை அணி
7 நக்கீரர் \ திருக்குறள் மழைக்கு நம்மால் கைம்மாறு செய்யமுடியாது.

பொதுநூல் எனல்[தொகு]

9 கல்லாடனார் \ ஆறு சமயத்தவரும் ஏற்கும்படி வாழ உதவும் பொருளை வகுத்துத் தந்தவர் வள்ளிவர்.
23 வெள்ளி வீதியார் \ செய்யாமொழி எனப்படும் வேதத்துக்கு உரியவர் அந்தணர் மட்டுமே. பொய்யாமொழி எனப்படும் திருக்குறளைச் சொல்வதற்கு உரியவர் எல்லா மக்களும்.

திருக்குறள் மருந்து எனல்[தொகு]

11 மருத்துவன் தாமோதரனார் \ :சீத்தலைச் சாத்தனார் என்னும் புலவரு பெயரைச் சீ ஒழுகும் தலையை உடைய சாத்தனார் என்று கொண்டு, புண்ணால் உண்டாகிய தலைவலி திருவள்ளுவரின் திருக்குறளைக் கேட்டதும் தீர்ந்துவிட்டது என்கிறார் இந்தப் புலவர்.
35 மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் \ இவர் திருக்குறளை 'வாயுறை வாழ்த்து' என்கிறார். இன்பம் எய்தவும், தின்பம் போக்கவும் உதவும் மருந்து இது
51 கவுணியனார் \ இருவினை தீர்க்கும் மாமருந்து.

திருக்குறள் இலக்கணச் செப்பம்[தொகு]

45 நச்சுமனார் \ எழுத்து, அசை, சீர், அடி, யாப்பு, வனப்பு, அணி, வண்ணம் அமைய வழு இல்லாமல் திருக்குறள் அமைந்திள்ளது.

திருக்குறளில் எல்லாம் உண்டு எனல்[தொகு]

42 செயலூர்க் கொடுஞ்செங் கண்ணனார் \ உள்ளுநர் உள்ளும் பொருளெல்லாம் திருக்குறளில் உண்டு.
29 மதுரைத் தமிழ்நாகனார் \ எல்லாப் பொருளும் இதன்பால் உள. இதில் இல்லாத எப்பொருளும் இல்லையால்.
33 நரிவெரூஉத்தலையார் \ இன்பம், பொருள், அறம், வீடு வள்ளுவர் சொன்னார்.
40 இழிகட் பெருங்கண்ணனார் \ இம்மை, மறுமை, எழுமை அனைத்தும் மும்மையில் (முப்பாலில்) சொன்னார்.

தனிச் சிறப்புகள்[தொகு]

13 அரிசில் கிழார் \ வள்ளுவர் பொருள் விரியும் சுருங்கிய சொல்லை வைத்துப் பாடியுள்ளார்.
17 முகையலூர்ச் சிறுகருந்தும்பியார் \ உள்ளுதல், உள்ளி உரைத்தல், உரைத்தவற்றைத் தெள்ளி எடுத்தல் என்கிற முறையில் திருவள்ளுவர் தம் பாடல்களை உருவாக்கியுள்ளார்.

அணிநலத்துடன் பாராட்டு[தொகு]

5 கபிலர் \ பனித்துளி பனைமரத்தைக் காட்டுவது போல்த் திருக்குறளில் பொருள் செறிந்துள்ளது.
10 சீத்தலைச்சாத்தனார் \ 3 வேந்தர், 3 மலை, 3 நாடு, 3 ந்தி, 3 பது, 3 முரசு, 3 தமிழ், 3 கொடி, 3 மா, - போல 3 பால் கொண்ட நூல் முப்பால் மூவேந்தர்களும் தலையில் சூடிக்கொள்ளும் மணிமுடியாகும். | விரிவு காண்க; மூவேந்தர்களின் தனியுடைமை
12 நாகன் தேவனார் \ நன்னீர்ப் பொய்கையில் நீராடுவோர் பருகும் நீருக்காக வேறு குறத்துக்குச் செல்லார். அதுபோல வள்ளுவரின் முப்பால் படிப்படிப்பவர் வேறு நூல் தேடி அலைய வேண்டுவதில்லை.
18 ஆசிரியர் நல்லந்துவனார் \ மக்களின் கலையையும், வேதப் பொருளையும் இணைத்துப் பாடியுள்ளார்.
19 கீரந்தையார் \ திருக்குறளின் முதல் பாடலிலேயே மூன்று பால்களில் சொல்லப்பட்ட செய்திகளும், நாற்பொருள் செய்திகளும் அடக்கம்.
31 உருத்திர சன்ம கண்ணர் \ கடல் மணல் தோண்டத் தோண்ட நீர் ஊறும். குழந்தை சுவைக்கச் சுவைக்கத் தாய்க்குப் பால் ஊறும். திருக்குறள் ஆய ஆய அறிவு ஊறும்.
34 மதுரைத் தமிழாசிரியர் செங்கஃன்றார் கிழார் \ வள்ளுவர் புலவர். அவர் காலைப்பொழுது. மற்றவர்களும் புலவர். அவர்கள் மாலைப் பொழுது.
36 கவிசாகரப் பெருந்தேவனார் \ சிறந்தது எது? பூக்களில் தாமரை. பொன்னில் சாம்புந்தம். ஆவில் காமதேனு. யானைகளில் ஐராவதம். பாவில் வள்ளுவர் வெண்பா.
38 காவூர் கிழார் \ முன்னையோர் முதுமொழி திருக்குறளுக்கு ஈடாகாது.
41 செயிர்க் காவிரியார் மகனார் சாத்தனார் \ செய்க, செய்யற்க என்று வள்ளுவர் கூறுவனவே மேலானவை.
44 களத்தூர் கிழார் \ வள்ளுவர் ஒருவர். குறள் 2 அடி. சொன்னது 3 பால். அளித்தது 4 பொருள். அடக்கம் 5 வேதம். 6 சமையம்.
49 தேனீக்குடிக் கீரனார் \ திருக்குறளால் மக்கள் மனத்தில் பொய் போயிற்று. மெய் நிலவிற்று.
50 கொடிஞாழல் மாணி பூதனார் \ அறம் பொருள் இன்பம் வீடு பற்றி இதுவரையில் கேளாதனவற்றை யெல்லாம் திருக்குறளில் கேட்டறிந்தோம்.

கருவிநூல்[தொகு]

  • திருக்குறள் உரைக்கொத்து, காமத்துப்பால், ஸ்ரீ காசிமடம்-திருபனந்தாள் வெளியீடு, இரண்டாம் பதிப்பு, 1961
  • சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்), அறிஞர் கழகம், தொகுப்பும் பகுப்பும் பேராசிரியர் எஸ் வையாபுரிப் பிள்ளை, 1940, இரண்டாம் பதிப்பு 1967
  • Index des mots de la letterature tamoule ancienne, INSTITUT FRANCAIS D'INDOLOGIE, PONDICHERY, 1967