திருக்கண்டீஸ்வரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருக்கண்டீஸ்வரம் கடலூர் மாவட்டத்திலுள்ள பண்ருட்டி தாலுகாவைச் சேர்ந்த ஒரு ஊராகும். இது நல்ல நிலவளமும் நீர்வளமும் பொருந்தியது. இவ்வூர் மக்களில் பெரும்பாலானவர்கள் வேளாண்மையிலும், கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டுள்ளார்கள். நெல்லும், கரும்பும் இங்கே விளைவிக்கப்படும் முக்கிய பயிர்களாகும்.

இவ்வூர் நெல்லிக்குப்பம் நகர நிர்வாகத்தின்கீழ் உள்ளது. இதனால், பாதுகாப்பான குடிநீர் வசதி, சுகாதார வசதி, சாலை வசதிகள், சாலை விளக்குகள், கல்வி வசதிகள், மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் என்பன தொடர்பில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருக்கண்டீஸ்வரம்&oldid=532145" இலிருந்து மீள்விக்கப்பட்டது