தா. இராமசாமி
தா. இராமசாமி (Ramasamy Doss) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்தவர். 1952ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து போட்டியிட்டு தமிழகச் சட்டமன்றத்திற்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]